மேலும் அறிய

வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

’’தேர்தல் அலுவலரான ஹரி  உடன் பிரபாகரன் என்பவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்து ஹரி உயிரிழந்தார்’’

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வயதுக்குட்பட்ட தாங்கி ஊராட்சியில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தாங்கி ஊராட்சிக்கு துணை தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் தேர்தல்அலுவலராக ஹரி என்பவர் ஈடுபட்டிருந்தார். தாங்கி ஊராட்சியில் மொத்தம் 6 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன.  இந்நிலையில், 6 வார்டு உறுப்பினர்களும்  ஒரு அறையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
 
அச்சமயத்தில் தலைவர் தேர்தலில் நின்ற பிரபாகரன் என்பவர் தோல்வி அடைந்ததால் துணை தலைவருக்காக தன்னுடைய ஆதரவாளர்  ஒருவருக்கு வாக்களிக்குமாறு ரகசிய அறையின் ஜன்னல் பகுதியில், இருந்து வாக்கு கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இதனை அடுத்து தேர்தல் அலுவலரான ஹரி  இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதிக்கு புறம்பானது என கூறியுள்ளார். இருந்தும் தொடர்ந்து பிரபாகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, ஹரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
 
பின்னர் அவர் முதலுதவி சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலேயே உயிர் பிரிந்தது. இதுகுறித்து ஊர்மக்கள் தெரிவிக்கையில், ஹரியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால்தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
 
மறைமுக தேர்தல்
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
 
வாலாஜாபாத் அருகே மறைமுகத் தேர்தல் நடத்த சென்ற உதவி தேர்தல் அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
 
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தொடங்கியவுடன் உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என்றும், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget