மேலும் அறிய

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

தென்னந்தியலம் உள்ளிட்ட ஐந்து அரசு டாஸ்மாக் கடைகளில் , பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் ரக சரக்குகளை திருடிய இந்த கும்பல் முள்வாடி மற்றும் கலவை பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர் .

தமிழ் நாட்டில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த தென்னந்தியலம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் (கடை எண் 11368 ) கடையில் மர்ம நபர்கள்  சுவரை துளையிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர் .


ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!
  
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இதே பாணியில் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்த எஸ்பி  ஓம்பிரகாஷ் மீனா டிஎஸ்பி பூரணி தலைமையில் இரண்டு தனிப்படையை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு அருகே இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு நபர் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்றில் வந்தார். அவரை மடக்கிப் பிடித்தபோது அந்த மூட்டையில் உயர் ரக அரசு மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

விசாரணையில் பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்.(46) இவர் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் இவரது உறவினர்களான கலவை முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த  சந்தானம்(26)  ராம்தாஸ்(21) ஆகியோர் துணையோடு தென்னந்தியலம் அரசு டாஸ்மாக் கடையை  துளையிட்டு உயர்ரக மதுபான பாட்டில்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. தென்னந்தியலம் மட்டுமில்லாமல் , மார்ச் மாதம் சேர்காட்டில் நடந்த டாஸ்மாக் கடை திருட்டிலும், வேலூர் மாவட்டம் கசத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தொடர்ந்து இருமுறை நடத்த திருட்டிலும் , ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் காவேரிப்பாக்கம் மட்டும் திமிரியில் நடந்த கொள்ளைகளிலும் இந்த மூன்று நபர்கள்தான் கொள்ளை அடித்தனர் என்பதை  போலீசார் உறுதி செய்தனர் .

போலீஸிடம் சிக்கியது எப்படி :

தென்னந்தியலம் உள்ளிட்ட ஐந்து அரசு டாஸ்மாக் கடைகளில் , பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்ரக சரக்குகளை திருடிய இந்த கும்பல் முள்வாடிமற்றும் கலவை பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதனிடையில் , தமிழ் நாடு அரசு வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள்  காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை  செயல்படும் என்று தெரிவித்ததை அடுத்து, கலக்கம் அடைந்த இந்த கும்பல் , கொள்ளை அடித்த மதுபட்டல்களை , டாஸ்மாக் விலையை விட குறைவான விலைக்கு விற்கத்தொடங்கி உள்ளனர் . இதுகுறித்த தகவல் அறிந்த தனிப்படை போலீசார் இந்த மூவர் கும்பலை கண்காணித்து வந்துள்ளது .


ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

இந்நிலையில் தான் , இந்த மூவர் கும்பல் வெள்ளிக்கிழமை அன்று , 2 லட்ச ருபாய் மதிப்பிலான சொகுசு பைக் ஒன்றை இன்ஸ்டால்மெண்ட் ஏதும் இல்லாமல் , முழு பணத்தை கட்டி வாங்கியுள்ளதை பற்றி கேள்விப்பட்ட போலீசார், மணிகண்டனை முதலில் கையும் களவுமாக பிடித்து அவர் கொடுத்த தகவல் மூலம் மீதமுள்ள இருவரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய புதிய சொகுசு இருசக்கர வாகனம் உற்பட மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து  ஒரு லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவர் மீதும்  ரத்தினகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , தீவிர விசாரணை நடந்துவருகிறது .

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget