மேலும் அறிய

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை

தாய் தந்தையர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்ததை பார்த்து விட்டு , தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு மாயாமாகி தற்கொலைக்கு முயன்றது ஏன்?

சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பாரதி என்ற வயதான தம்பதியினர் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி நேற்று தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன் தினேஷ் மற்றும் மகள் பாக்கிய லட்சுமி சம்பவ இடத்தில் இருந்து மாயமான நிலையில், ஈ.சி.ஆர் பகுதியில் அவ்விருவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனை யிலும் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயதான தம்பதியரின் தற்கொலை விவகாரம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை
 
குறிப்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்பட 3 பேரிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6.30 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி, துளசிதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த  நிலையில், இவ்விவகாரத்தில் பாலாஜியுடன் தொடர்பிருப்பதாகக் கூறி நேற்று முன் தினம் தினேஷை அழைத்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தியது தெரியவந்தது. மேலும், தினேஷ் தனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி பாலாஜியிடம் கொடுத்ததும், அதை அவர் ஏமாற்றியதால் பணம் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் பணத் தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை
 
இந்நிலையில் பெரியமேடு போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்ததால், மனமுடைந்து தினேஷின் தாய், தந்தையர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தினேஷ் வீட்டில் வந்து பார்க்கும் போது தாய் தந்தையர் இறந்து கிடந்ததாகவும், அதனால் பயந்து வீட்டை விட்டு வெளியேறி ஈ.சி.ஆர் பகுதிக்குச் சென்று தானும், தன் சகோதரி பாக்கியலட்சுமி என்பவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாகவும், இந்த மோசடி வழக்கில் தன்னை சிக்க வைக்க பல்வேறு சதித் திட்டம் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி தினேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தினேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வயதான தம்பதியினர் உயிரிழந்த விவகாரத்தில் தற்கொலைக்கான காரணம் வெளியாகி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாய் தந்தையர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்ததை பார்த்து விட்டு , தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு மாயாமாகி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்தும், தங்க மோசடி வழக்கில் சிக்கியதால் தப்பிக்கும் நாடகமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget