மேலும் அறிய

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை

தாய் தந்தையர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்ததை பார்த்து விட்டு , தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு மாயாமாகி தற்கொலைக்கு முயன்றது ஏன்?

சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பாரதி என்ற வயதான தம்பதியினர் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி நேற்று தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன் தினேஷ் மற்றும் மகள் பாக்கிய லட்சுமி சம்பவ இடத்தில் இருந்து மாயமான நிலையில், ஈ.சி.ஆர் பகுதியில் அவ்விருவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனை யிலும் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயதான தம்பதியரின் தற்கொலை விவகாரம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை
 
குறிப்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்பட 3 பேரிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6.30 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி, துளசிதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த  நிலையில், இவ்விவகாரத்தில் பாலாஜியுடன் தொடர்பிருப்பதாகக் கூறி நேற்று முன் தினம் தினேஷை அழைத்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தியது தெரியவந்தது. மேலும், தினேஷ் தனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி பாலாஜியிடம் கொடுத்ததும், அதை அவர் ஏமாற்றியதால் பணம் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் பணத் தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்க மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் மனமுடைந்து தாய் தந்தை தற்கொலை
 
இந்நிலையில் பெரியமேடு போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்ததால், மனமுடைந்து தினேஷின் தாய், தந்தையர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தினேஷ் வீட்டில் வந்து பார்க்கும் போது தாய் தந்தையர் இறந்து கிடந்ததாகவும், அதனால் பயந்து வீட்டை விட்டு வெளியேறி ஈ.சி.ஆர் பகுதிக்குச் சென்று தானும், தன் சகோதரி பாக்கியலட்சுமி என்பவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாகவும், இந்த மோசடி வழக்கில் தன்னை சிக்க வைக்க பல்வேறு சதித் திட்டம் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி தினேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தினேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வயதான தம்பதியினர் உயிரிழந்த விவகாரத்தில் தற்கொலைக்கான காரணம் வெளியாகி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாய் தந்தையர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்ததை பார்த்து விட்டு , தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு மாயாமாகி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்தும், தங்க மோசடி வழக்கில் சிக்கியதால் தப்பிக்கும் நாடகமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget