மேலும் அறிய

‛கணக்கெடுப்பிற்கு அழுத்தம் தருகிறார்கள்’ விஏஓ சங்கத்தினர் குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலில் செய்த பணிகள் இதுவரை பலருக்கு ஊதியம் வழங்கவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் உதவியாளர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
 

‛கணக்கெடுப்பிற்கு அழுத்தம் தருகிறார்கள்’ விஏஓ சங்கத்தினர் குற்றச்சாட்டு!
இக்கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருக்கும் நிர்வாகப் பயிற்சி நில அளவை பயிற்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும் . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலின் போதும் பணியாற்றிய ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை பணம் செலுத்தப்படவில்லை, அவர்களுக்கு உடனடியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும். மேலும் நலத்திட்ட உதவிகள் பொருட்கள் வரும்போது குறிப்பாக புடவை, வேஷ்டி, சேலை, ஆகியவை பொருட்கள் வரும்போது அவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளது அதை மாற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிடிக்கும் சிபிஎஸ் தொகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அவை உடனடியாக துவங்க வேண்டும். கொரானா வைரஸ் தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‛கணக்கெடுப்பிற்கு அழுத்தம் தருகிறார்கள்’ விஏஓ சங்கத்தினர் குற்றச்சாட்டு!
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் பிரதிநிதிகள் கூறுகையில்,  அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலவிதமான கணக்கெடுப்புகள் எடுக்கச்சொல்லி அழுத்தம் வருகிறது ஆனால் அதற்கெல்லாம் பல அமைப்புகள் இருந்தாலும் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யுமாறு வருத்தப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை கண்காணிக்க வேண்டும் என ஒரு உத்தரவு வந்துள்ளது. நகராட்சி ஆகிய பகுதிகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதை பிடிப்பது வழக்கம் ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதை எவ்வாறு கண்காணிக்க முடியும். மாடுகளை அவர்கள் கண்காணித்தால் அவர்கள் இருக்கும் பணிகளை எப்படி செய்வார்கள்.

‛கணக்கெடுப்பிற்கு அழுத்தம் தருகிறார்கள்’ விஏஓ சங்கத்தினர் குற்றச்சாட்டு!
இது போன்ற தன்னிச்சையாக செயல்படுவது சரி இல்லை என தெரிவித்தனர். மேலும் புரிதல் இல்லாமல் தங்களிடம் வேலை வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார். பல்வேறு துறைகளில் செய்ய வேண்டிய வேலைகளை அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர்களும் கூறுவது சரியில்லை என  கூறினார். ஒரு பிரச்சனையை தீர்க்க தெரியாமல் அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரை பார்க்க வேண்டும் என திருப்பி அனுப்புவது சரி அல்ல என தெரிவித்தார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்து இருக்கும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்

 

மேலும் படிக்க...

 

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

 

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

 

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget