மேலும் அறிய

Vaccination | சென்னை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள கர்ப்பிணிகளிடம் தொடரும் தயக்கம்.. அச்சம் தரும் ஆய்வு

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளில், சென்னையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்று தெரியவந்துள்ளது

தமிழ்நாட்டில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி கர்ப்பிணிப் பெண்களில் 56% பேர் கொரோனா தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

தமிழ்நாட்டில், 2021-22 கால கட்டத்தில் 674163 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில சுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது. இதில், சுமார் 56 சதவீதத்தினருக்கு (376073) குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அறந்தாங்கி, கரூர், கன்னியாகுமரி, பழனி, பெரம்பலூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய சுகாதார மாவட்டங்களில் (health Unit Districts) 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.         

Vaccination | சென்னை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள கர்ப்பிணிகளிடம் தொடரும் தயக்கம்.. அச்சம் தரும் ஆய்வு

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சென்னையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லயென்று தெரியவந்துள்ளது. சென்னையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி வாய்ந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 58,319 ஆக உள்ள நிலையில், வெறும் 13,772 பேர் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது, மாநிலத்தின் சராசரி விகிதத்தை விட  கிட்டத்தட்ட இரண்டு மடங்கு குறைவான (23%) எண்ணிக்கையை சென்னை கொண்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தயக்கத்தை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சமுதாய அளவில் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.   

பொதுவாக, பொருளாதார ரீதியாகவும், சமூக அளவிலும் பின்தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்குவதாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி திட்டத்தைப் பொறுத்தவரையில் பின்தங்கிய மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 


Vaccination | சென்னை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள கர்ப்பிணிகளிடம் தொடரும் தயக்கம்.. அச்சம் தரும் ஆய்வு

கர்ப்பிணிப் பெண்களுக்களுக்கான தடுப்பூசி பணி:     

கொரோனா இரண்டாம் அலையின்போது, பல பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு கடுமையானால், இது கர்ப்பக் காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன.  குறிப்பாக, கடைசி மூன்று மாதங்களில் கருப்பை விரிவடைந்து உதரவிதானத்தில் அழுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு குறைத்து தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அந்த பெண்ணுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள்  இதுபோன்ற தீவிரமான பாதிப்தை தடுக்க உதவும் என்று கூறப்பட்டது.   

தாய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதன் மூலம் அவரது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி, கருவில் இருக்கும் குழந்தைக்கும் ரத்தம் மூலம் சென்று, பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாய்ப்பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டுமே பாதுகாப்பானது. கருவுற்ற நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget