மேலும் அறிய

அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கும் போலீசார்; நாங்குநேரி சம்பவத்திற்கு பழிக்கு பழியா?

Kanchipuram: அதிகளவு பயணிகளை ஏற்றி வந்தது மற்றும்  நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியது ஆகிய இரண்டு பிரிவின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறியதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த தாம்பரம் போக்குவரத்து போலீசார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலாக பரவியது. இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கியுள்ளனர். 

 அரசு பேருந்துகள் மீது அபராதம்

தாம்பரம் காவல்  எல்லைக்குட்பட்ட தாம்பரம் போலீசார் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு பேருந்துகளுக்கு அபராதங்களை விதித்துள்ளனர். சென்னையில் இருந்து  திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து விதிகளை மீறி சென்றதாக பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணி மீது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லை மற்றும்  நோ பார்க்கிங் ஆகிய   இரண்டு பிரிவின் கீழ் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கும் போலீசார்; நாங்குநேரி சம்பவத்திற்கு பழிக்கு பழியா?

இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து மீதும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதிகளவு பயணிகளை ஏற்றி வந்தது மற்றும்  நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியது ஆகிய இரண்டு பிரிவின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

"நாங்குநேரியில் நடந்த சம்பவம்"

நாகர்கோவிலில் இருந்து நெல்லை - நாங்குநேரி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.  அப்பொழுது நாங்குநேரி நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவலர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். நடத்துனர் சம்பந்தப்பட்ட  காவலரிடம் டிக்கெட் கேட்ட பொழுது  காவல்துறை டிக்கெட் எடுக்க தேவையில்லை என காவலர் மறுத்ததாக தெரிகிறது. அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் பணி நிமிர்த்தமாக பயணிக்கும் போது டிக்கெட் எடுக்க தேவையில்லை. எனவே நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என காவலர் கூறியுள்ளார்.  அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும், வாரண்ட் இல்லாமல்  பயணித்தால் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துனர் எடுத்துக் கூறியுள்ளார்.


அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கும் போலீசார்; நாங்குநேரி சம்பவத்திற்கு பழிக்கு பழியா?

அரசு ஊழியர் நான் பணி நிமித்தமாக செல்லும்பொழுது டிக்கெட் எடுக்க வேண்டாம் என மீண்டும் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  ஒரு கட்டத்தில் பயணிகள் சிலர் நாங்களே காவலருக்கு டிக்கெட் எடுக்கிறோம் என்று தான் கூறியும் காவலர் ஏற்றுக் கொள்ளாததால், பேருந்து அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டு வந்துள்ளது.  ஒரு கட்டத்தில் பயணிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் காவலர் டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பேருந்து அங்கிருந்து சென்றது.

"பழிக்கு பழி"

இந்தநிலையில், இது தொடர்பான வீடியோவை எடுத்த நடத்துனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.  இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் காவலர்கள் விதிகளை மீறும் அரசு பேருந்துகள் மீது,  அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவலர் ஒருவர் பயணச்சீட்டு இல்லாமல்,  பயணம் செய்ய வாக்குவாதம் செய்த வீடியோ வைரலான நிலையில்,  தற்போது  போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து மீது அபராதம் விதித்து வருவது பழிக்கு பழி  நடைபெறும் சம்பவமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget