மேலும் அறிய

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயரில் மரக்கன்று- கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி...!

மரமானது வளர்ந்த பின் யாருடைய நினைவாக வைக்கப்பட்டதோ அவர்களின் பெயர்கள் அந்த மரத்தில் பொரிக்கப்படும் அல்லது அவர்களின்  பெயர்ப்பலகைகள்  வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பமான கொரோனா பேரிடரானது முதல் அலை , இரண்டாம் அலை என பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையையும் மத்திய மாநில அரசுகள் விடுத்துள்ளன. 

இதேபோல் உலக சுகாதார மையம் இந்த கொரோனா மூன்றாம் அலையினை சாதரணமாக எண்ணாமல் அனைவரும் விழிப்போடு செய்யலபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மூன்றாம் அலையானது குழந்தைகளை மிகவும் பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளது மட்டுன்றி மூன்றாம் அலையில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாமல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

கடலூரிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் வரும் நிலையில் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நினைவாக மரம் நடுவதற்கான முன்னெடுப்பை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயரில் மரக்கன்று- கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி...!

கடலூரில் இதுவரை 61,220 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 59622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 533 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சுமார் 777 பேர் சிகிச்சையில் உள்ளனர் இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது தடுப்பூசி செலுத்தி கொள்வது என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில்  கடலூரில் இறந்தவர்களின் நினைவாக மரக்கன்று நடும் விழாவினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் ஆகியோர் முதற்கட்டமாக தொடங்கிவைத்தனர். வில்வநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கைகளால் மரக்கன்று நடப்பட்டது.

அந்த மரமானது வளர்ந்த பின் யாருடைய நினைவாக வைக்கப்பட்டதோ அவர்களின் பெயர்கள் அந்த மரத்தில் பொரிக்கப்படும் அல்லது அவர்களின்  பெயர்ப்பலகைகள்  வைக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் தெரிவித்தார். இவ்வாறு கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடுவது சுற்றுச்சூழலுக்கும் நல்லது, இறந்தவர்களையும் ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நினைவாக மரம் நடும் நிகழ்வை முன்னெடுக்கும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முயற்சியை மாவட்டம் தோறும் விரிவு படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget