மேலும் அறிய

Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் 4-வது ரயில் முனையத்தை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரையிலான 5, 6-வது புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பெரம்பூரில், 4-வது ரயில் முனையம் அமைய உள்ளது. இதற்கு திட்டமிட்டுள்ள தெற்கு ரயில்வே, அத்திட்டத்திற்காக பெரம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு புதிதாக 2 ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

4-வது முனையம், ரூ.182 கோடியில் 2 புதிய ரயில் பாதைகளுக்கு ஒப்புதல்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் முனையங்களைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி செய்ய வேண்டுமென்றால், பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை, 6.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 5 மற்றும் 6-வது ரயில் பாதைகளை அமைக்க வேண்டும். 

4-வது ரயில் முனையத்திற்காக இதை செய்ய வேண்டும் என, ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், 182 கோடி ரூபாய் மதிப்பில், பெரம்பூர் - அம்பத்தூர் இடையே 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகரித்துவரும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க ரயில்வே திட்டம்

தமிழ்நாட்டில் முக்கியமான ரயில் முனையமாக இருப்பது, தலைநகர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் முனையம்தான். அங்கிருந்து வட மாவட்டங்கள், வட மாநிலங்கள், மேற்கு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் முனையங்கள் இருந்தாலும், அங்கிருந்து பெரும்பாலும் தென் மாவட்ட ரயில்களே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்ட்ரல் வழித்தடத்தில் வேறு ரயில் முனையம் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்து செல்லும் அனைத்து ரயில்கள், பயணிகளின் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறன்றன.

தற்போதைய சூழலில், நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வட மாநில ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துவிட்ட நிலையில், புதிய முனையம் ஒன்றை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

பெரம்பூரில் புதிய ரயில் முனையம்

இந்த சூழலில் தான், ஏற்கனவே ரயில்கள் நின்று செல்லும் பெரம்பூர் ரயில் நிலையத்தை, ரயில் முனையமாக மாற்றி, அங்கிருந்த கூடுதலாக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

இதற்காக, பெரம்பூர் ரயில் நிலையத்தை 360 கோடி ரூபாயில் சென்னையின் 4-வது ரயில் முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

முன்னதாக, ஆவடியை 4-வது முனையமாக மாற்றலாம் என்று யோசனை செய்யப்பட்ட நிலையில், அங்கு போதிய கட்டமைப்புகள் இல்லாத நிலையில், பெரம்பூரையே ரயில் முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக, ரயில்வே வாரியத்திடம் சில மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே பரிந்துரை அளித்த நிலையில், அதோடு சேர்த்து, பெரம்பூர்-அம்பத்தூர் இடையிலான புதிய ரயில் பாதைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, தற்போது இந்த திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பதில் சந்தேகமில்லை.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Embed widget