மேலும் அறிய

Property Tax: சொத்து வரி செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு

முன்னதாக நவம்பர் 15ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை சென்னை மாநகராட்சி நீட்டித்திருந்தது.

சென்னை மாநகராட்சியில் நடப்பு ஆண்டான 2022 - 2023க்கான சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் நடப்பு நிதியாண்டுக்கான 2ஆம் அரையாண்டு சொத்து வரியை நவம்பர் 15ம் தேதிக்குள் செலுத்துமாறு கால நீட்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிவரை தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.

முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டிருந்தது. சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, சொத்து வரி அடையாள அட்டை வழங்க உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்தது.

சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் கட்டக்கூடிய சொத்து விவரங்கள் இருக்கும். அடையாள அட்டைகளில் உரிமையாளர்களின் பெயர்கள், சொத்து வரி ஐடி மற்றும் QR குறியீடு ஆகியவை ஸ்கேன் செய்யும்போது சொத்து, அதன் அளவு, வரி நிலுவைத் தொகை மற்றும் இதற்கு முன்பு செலுத்திய தொகை போன்ற அனைத்து விவரங்களும் அடையாள அட்டைகளில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

”பலருக்கு சொத்து அடையாள அட்டைகள் குறித்த விவரங்கள் சரிவர இல்லாததால் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சொத்து உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை அவர்களது வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் புவியியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், சுமார் 3 லட்சம் சொத்துகள் குறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இந்தச் சொத்துக்களை மறுமதிப்பீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். சொத்து வரி வசூலை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியை விட, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் சொத்து வரி வசூல் ரூபாய் 293 கோடி அதிகரித்துள்ளது” என இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இது குறித்து முன்னதாகப் பேசிய சென்னை மேயர் பிரியா, “சொத்து வரி செலுத்த போதிய கால அவகாசம் வழங்கியபோதிலும், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீத தனி வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு செய்து அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget