மேலும் அறிய

புகழ்பெற்ற நடவாவி கிணறு..! பசுமையா மாறப்போகுது..! காஞ்சிபுரம் மக்களுக்கு ஜாலிதான்..!

Sanjeevirayar temple: சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் என்பது தொழிற்சாலைகள் மாவட்டம் என தற்போது விளங்கி வரும் நிலையில், இங்கு மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் சாலை பணி விரிவாக்கம் எனக் கூறிக்கொண்டு சாலை ஓரம் மரங்களை உள்ள இழந்து வருகிறோம். இதற்கு மாற்றாக நெடுஞ்சாலை துறை பணிகள் முடிந்தவுடன் சாலையோர மரங்களை நட முடிவு செய்து, மரக்கன்றுகளை பணிகள் முடிந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலைகள் புகை வாகனங்களின் புகை என நாள்தோறும் எண்ணிக்கையில் அதிகமாக சுத்தமான காற்று என்பதே , தற்போது இல்லாத நிலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உருவாகி வருகிறது.
 
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம்
 
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொழிற்சாலை புகைகள் மற்றும் குப்பைகள் எரிப்பதால் சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் காலியாக உள்ள, தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை தோட்டக்கலை துறை மூலம் உற்பத்தி செய்து,  கிராம ஊராட்சிகளுக்கு வழங்க உத்தரவிட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் வீடுகள் தோறும் இலவசமாக இரண்டு மரக்கன்றுகளையும், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சிகள் மூலம் வழங்கி வருகிறது.
 
மரக்கன்றுகளை நடும் பணியில், 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில், 100 நாள் ஊழியர்கள்
சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் 
 
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவிராய திருக்கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது.  இந்த நிலமானது, சித்ரா பெளர்ணமி அன்று புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் எழுந்தருளும் நடவாவி கிணறு அருகே அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் யோசனைக்கிணங்க, ஊராட்சி  பொதுமக்கள் ஒத்துழைப்புடன், தோட்டக்கலை துறையுடன் இணைந்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மா , பலா , கொய்யா,  நெல்லி நாவல் உள்ளிட்ட பழவகை மரங்களும், தென்னை, புங்கை,  வேப்பம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களையும் தற்போது நடவு செய்து அதற்கு 100 நாள் திட்ட வேலை பணியாளர்கள் உதவியுடன் பராமரிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
 
4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை
 
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், "ஆக்கிரமிப்பில் இருந்த திருக்கோயில் நிலம் உரிய ஆவணங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் 750 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து தற்போது இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இயற்கை சூழலை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகளையும், பறவை இனங்களுக்காக பழவகை மரங்களும் நடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்காக 27 நட்சத்திர ஸ்தல விருட்ச மர வகைகளும், மூலிகை செடிகள் இப்பகுதியில் நடவு செய்யப்பட உள்ளது. கிராமமே சேர்ந்து பசுமை வனம் உருவாக்குவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது” என தெரிவித்தார். மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget