மேலும் அறிய

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் - அமைச்சர் உதயநிதியின் ரியாக்‌ஷன் என்ன?

கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்தபோது, நாய் ரேஸா கார் ரேஸா என சிலர் விமர்சித்தனர்.

பார்முலா 4 கார் - சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுத்துறை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சென்னை மாநகராட்சி, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததற்கான பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; 

பார்முலா 4 கார்பந்தயம் தொடங்கும் போது இந்த கார் பந்தயம் நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் இருந்தது. தற்போது கார் பந்தயம் நடந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

தெற்காசியாவிலேயே முதன் முறையாக நடைபெற்ற இரவுநேர பார்முலா 4 கார்பந்தயத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் விளையாட்டு மேம்பாட்டுத் விளையாட்டுத் துறையின்  செயல்பாடுகளில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.

முதலமைச்சருக்கு அளித்த வாக்குறுதி 100% காப்பாற்றி உள்ளோம்

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரும் பாராட்டுகின்றனர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.

பாதுகாப்பாக சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் நடத்துவது தான் கார் பந்தயத்தின் உண்மை வெற்றி என முதலமைச்சர் கூறினார். சிறுவிபத்து கூட இருக்காது என முதலமைச்சருக்கு வாக்குறுதி அளித்து விட்டு தான் போட்டியை நடத்தினோம். முதலமைச்சருக்கு அளித்த வாக்குறுதியை 100% காப்பாற்றி உள்ளோம். 

குறிப்பாக , தூய்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அதிகாலை, வெயில் என 2 நாட்கள் பந்தய தடத்தை தூய்மையாக வைத்திருந்தனர். போக்குவரத்து காவல்துறையின் பங்கும் முக்கியமானது. நகரின் மையப்பகுதியில் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும் சூழல் இருந்தது.

சிலர் போட்டியை நிறுத்த கூட முயற்சி செய்தனர்

போக்குவரத்து நெரிசலை பெரிய செய்தியாக்க வேண்டும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் போட்டியை நிறுத்தக் கூட சில முயற்சி செய்தனர்.  ஒரு புறம் இயல்பான போக்குவரத்தும், மறுபுறம் கார் ரேஸ் நடந்துக் கொண்டிருந்தது போன்ற வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்து போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் விமர்சித்தவர்கள் கூட பாராட்டினார்கள்.

சின்ன விபத்தைக் கூட ஊதி பெருசாக்க சிலர் காத்திருந்தனர். கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்த போது நாய் ரேஸா கார் ரேஸா என சிலர் விமர்சித்தனர். பார்முலா 1 கார் பந்தயத்திலேயே பந்தய நடத்திற்குள் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் சென்ற நிகழ்வுக் கூட தெரியாத அறிவாளிகள் தான் கார் பந்தயம் குறித்து பேசுகின்றனர்.

கார் பந்தயத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கார் ரேஸ் நடத்தவில்லையென்றாலும் இன்னும் நடத்தவில்லையா என விமர்சனம் செய்திருப்பார்கள். கார் பந்தயத்திற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையையும், போட்டி நடந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். 

நினைத்ததை விட அதிகளவிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. கார் ரேஸ் நடத்தக்கூடாது என நினைத்தவர்கள் கூட 2வது நாளில் எங்களுக்கும் கார் ரேஸ் பார்க்க பாஸ் வேண்டும் எனக் கேட்டனர். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது என 3 நாட்கள் நடத்த வேண்டிய ரேஸை 2 நாட்களில் நடத்தி முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார் எனத் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; 

கார் பந்தயம் நடத்தி முடித்தது அனைவருக்கும் மகிழ்ச்சி தான். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடந்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தமிழத்தின் பக்கம் திரும்பியது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் உதயநிதி புறப்பட்டபோது, கோயம்புத்தூரில் அன்னபூர்ண உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜிஎஸ்டி குறித்து நிகழ்ச்சியை உரையாடல் மற்றும் அந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, எனக்கு தெரியாது என அமைச்சர் உதயநிதி பதிலளித்து சென்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர மேயர் பிரியா, எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மெகநாத் உள்ளிட்டோர் உடன் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget