மேலும் அறிய

Melmaruvathur Temple: மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு; அகற்ற சொன்ன நீதிமன்றம் - தலையசைத்த தமிழக அரசு

melmaruvathur encroachment : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் (Melmaruvathur Adhiparasakthi)

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள, ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிகப் பிரசித்தி பெற்ற கோவிலாக ( melmaruvathur temple ) இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு, வருகை புரிவது வழக்கமாக உள்ளது. பிற கோவில்களை போல பெண் பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இந்த கோவிலில் கிடையாது. குறிப்பாக பெண் பக்தர்கள் கூட கோவில் கருவறைக்குசென்று அபிஷேகம் செய்ய முடியும் என்பதால், அதிகளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவது வழக்கம். அதே போல் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான, ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த கோவிலில் பல்வேறு வகையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Melmaruvathur Temple: மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு; அகற்ற சொன்ன நீதிமன்றம் - தலையசைத்த தமிழக அரசு

 நீர்நிலை ஆக்கிரமிப்பு

நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து திருமண மண்டபத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டிருந்தது என கூறி திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மேல்மருவத்தூர் மற்றும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, நீதிமன்றம் மூலம் பல உத்தரவுகளை பெற்றுள்ளார். அதேபோன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல தகவல்களை பெற்று, அதன் மூலம் வழக்கு தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஜூ கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சர்வே எண் 12 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சர்வே எண் 13 /1 இடத்திலையும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Melmaruvathur Temple: மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு; அகற்ற சொன்ன நீதிமன்றம் - தலையசைத்த தமிழக அரசு

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி, உடனடியாக, இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், 3 வாரத்திற்குள் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை சம்பந்தப்பட்ட துறையினரும் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஒட்டிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உறுதி

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த ராஜா நம்மிடம் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய போது அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள், இருப்பதாக தகவல் தெரிவித்து இருந்தனர். அதேபோன்று அந்த ஆக்கிரமிப்புகள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் என தெரிய வந்தது. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அடிகளாரின் மகன் தேவி பெயரில், இருப்பதும் சுமார் அங்கு 60 கடைகள் செயல்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவில் தெரிய வந்தது.


Melmaruvathur Temple: மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு; அகற்ற சொன்ன நீதிமன்றம் - தலையசைத்த தமிழக அரசு

 இரண்டு நுழைவு வாயில்கள்

அதேபோல் இந்த பகுதியில் வருடத்திற்கு சுமார் 40க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பட்சத்தில், விபத்துக்கள் குறையும் என தெரிவித்தார். அதே போன்று மேல்மருவத்தூர காவல் நிலையம் மற்றும் தபால் நிலையத்திற்கு செல்ல வழி இல்லை என்பதால் அதற்கு வழி ஏற்படுத்தி தர நீதிபதி அறிவித்துள்ளார். மூன்று வாரங்களுக்குள் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவு கூறப்பட்டுள்ளதாக ராஜா நம்மிடம் கூறினார். குறிப்பாக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு நுழைவு வாயில்கள், 60 கடைகள், உள்ளிட்டவை இந்த ஆக்கிரமிப்பில் உள்ளன என கூறுகிறார் ராஜா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget