மேலும் அறிய

நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் மகேஷ். இவர், கடந்தாண்டு ஜூனில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரில், எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அபகரித்து கொண்டார். அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.


நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இம்மாதம் 24ம் தேதி, ஜெயகுமார் உள்ளிட்ட மூவர் மீதும், கூட்டுசதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள ஜெயகுமாரை, ஆலந்துார் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இருபத்தி 28 தேதி ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி  மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து நேற்று விசாரணைக்கு வந்தபோது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மனு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.


நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இந்நிலையில், ஜெயகுமார் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர், அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த, 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளார் என, புதிய புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது. நடவடிக்கை எடுப்பது பற்றி, சட்ட வல்லுனர்களுடன், போலீசார் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது, குடிசை மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீடு செய்ததில், முறைகேட்டில் ஈடுட்டார் என, புகார் வந்துள்ளது; விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget