மேலும் அறிய

நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் மகேஷ். இவர், கடந்தாண்டு ஜூனில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரில், எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அபகரித்து கொண்டார். அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.


நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இம்மாதம் 24ம் தேதி, ஜெயகுமார் உள்ளிட்ட மூவர் மீதும், கூட்டுசதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள ஜெயகுமாரை, ஆலந்துார் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இருபத்தி 28 தேதி ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி  மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து நேற்று விசாரணைக்கு வந்தபோது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மனு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.


நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

இந்நிலையில், ஜெயகுமார் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர், அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த, 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளார் என, புதிய புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது. நடவடிக்கை எடுப்பது பற்றி, சட்ட வல்லுனர்களுடன், போலீசார் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது, குடிசை மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீடு செய்ததில், முறைகேட்டில் ஈடுட்டார் என, புகார் வந்துள்ளது; விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget