மேலும் அறிய

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்

ஏற்கனவே செங்கல்பட்டு நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த ' குரங்கு குமார் ' மற்றும் ' ரவி பிரகாஷ் ' இருவரும் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

செங்கல்பட்டு நகராட்சி
 
செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் மற்றும் 60 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியை பொருத்தவரை கடைசியாக நடந்த 2006, 2011 நகர மன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை மாற்றி மாற்றி கைப்பற்றின. தற்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு நகர மன்ற தேர்தல் நடைபெறுவதால் திமுக , அதிமுகவிற்கு இடையே செங்கல்பட்டு நகராட்சி கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு தேர்தலிலும், நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்
 
குரங்கு குமார்
 
செங்கல்பட்டில் அசைக்கமுடியாத பிரபல ரவுடியாக இருந்து வந்தவர்தான் " குரங்கு குமார்" . தமிழகத்தில் குரங்கு குமாரை தெரியாத பிரமுகர்களே கிடையாது, என்ற அளவிற்கு குரங்கு குமார் செங்கல்பட்டு பகுதியில் கொடிகட்டி பறந்தார். குரங்கு குமாரின் அண்ணன்கள் இருவரும் செங்கல்பட்டு பகுதியில் முக்கிய ரவுடிகளாக இருந்து வந்தனர். அந்த செல்வாக்கை பயன்படுத்தி செங்கல்பட்டை தான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் குரங்கு குமாரை காவல்துறையினர் அவரை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுதுதான் திருந்தி வாழ நினைத்த குமார் அரசியலுக்குள் நுழைந்தார்.

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்
 
 நகரச் செயலாளர் குமார்
 
 செங்கல்பட்டு நகராட்சியில் 13-வது வார்டு மக்கான் சந்துப்பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரனார் குமார். இதனையடுத்து, செங்கல்பட்டு   நகர்மன்றத் துணை  தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றினார். செங்கல்பட்டு, அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. கட்சிப் பணியை செங்கல்பட்டு நகர பகுதியில் வேகமாக செய்து வந்தார் குரங்கு குமார்.
 

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்
செங்கல்பட்டை அதிமுகவின் கோட்டையாக மாற்ற பணிகளை மேற்கொண்டு வந்த குமாரின், மனதில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இந்நிலையில் நவம்பர் 17 , 2007  நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த பொழுதே குரங்கு குமார் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்  ரவுடி ரவி பிரகாஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .
 
 
ரவி பிரகாஷ்
 
 
செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி பிரகாஷ். குரங்கு குமாருக்கும் ரவிபிரகாஷ்க்கும் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதன் அதேபோல் குரங்கு குமார் இடத்தை பிடிக்க ரவி பிரகாஷுக்கு ஆசை இருந்து வந்தது. இதன் காரணமாகவே குரங்கு குமார் கொலை நடைபெற்றது. இதனையடுத்து ரவி பிரகாஷ் திமுகவின் நகர செயலாளரானார். இதனையடுத்து  " குரங்கு குமார் " இருந்த நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியையும் ரவி பிரகாஷ் கைப்பற்றினார். ஜனவரி 06, 2012 ஆம் ஆண்டு ரவி பிரகாஷ் 20 பேர் கொண்ட  கும்பலால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்
 
 
மீண்டும் களத்தில் 
 
நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் குமாரின் மகனான M.K. சுரேஷின் மனைவி சிந்தியா செங்கல்பட்டு நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட உள்ளார். தற்போது சுரேஷ் அதிமுகவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கு குமாரின் மருமகள், செங்கல்பட்டு நகர்புற தேர்தலில் போட்டியா ? பரபரப்பாகும் செங்கல்பட்டு தேர்தல் களம்
 
மீண்டும் அதிமுக செங்கல்பட்டு நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குரங்கு குமார் மகன் களத்தில் குதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரின் மருமகள் நேரடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பது செங்கல்பட்டு நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget