மேலும் அறிய

வேளச்சேரியில ஒரு ஏரியவே காணோம்.. எல்லாமே கட்டிடங்கள்.. சாட்டையடி கொடுக்கும் புகைப்படம்!

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்லும் மனிதன் தான் குற்றவாளி. இயற்கை அன்னை ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சரியான தீர்ப்பையே எழுதிக் கொண்டிருக்கிறாள்.

”ஏரி என்றால் மழை நீரால் நிரம்பும் நீர்ப்பாசனத் தொட்டி. மழைகாலத்தில் ஏரிகள் நிரம்பும். நீங்கள் ஏரிக்குள் வீடு கட்டியிருந்தால் உங்கள் வீடும் நிரம்பும். அதை நீங்கள் வெள்ளம் என்று சொல்லக்கூடாது. மழை நீருக்கு சிஎம்டிஏ ஒப்புதல் எல்லாம் தெரியுமா?” என்று ட்வீட் செய்துள்ளார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.

சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஓராண்டு சராசரி மழையை வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே சென்னை பெற்றுவிட்டது. 

சென்னையில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே பெய்த மழையின் தேங்கிய நீரே இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. இதில் இன்னும் மழையா என்று மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டபோது ஒட்டுமொத்த சென்னையும் தத்தளித்தது. அதுபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

கடந்த பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அதற்கான காரணங்களை விளக்கிய நிபுணர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பையே முக்கியக் காரணமாகக் கூறினர். நீர்வழித் தடங்களை ஆறு, ஏரிகள் மறப்பதில்லை. அதனால் மழைக் காலத்தில் நீரின் ஓட்டம் அந்த வழியாகவே அமைகிறது. ஆனால், அந்த வழியில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அப்புறம் மழை நீர் அந்தப் பகுதிகளிலேயே தேங்குவது இயல்பு தானே.

அதைத்தான், சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வரைபடங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று வேளச்சேரியின் பழைய படம். இன்னொன்று வேளச்சேரியின் தற்போதைய படம். முதல் படத்தில் வேளச்சேரி ஏரி தனது முழு கொள்ளளவுடன் இருப்பதைக் காண முடிகிறது. இரண்டாவது படத்தில் வேளச்சேரி ஏரியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. அதைப் பார்க்கும் போது மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்கினால் நீங்கள் இன்னும் மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எவ்வளவு பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்களாக நிரப்பியுள்ளோம். இதில் பலரிடம் விசாரித்தால் நாங்கள் சிஎம்டிஏ அப்ரூவலுடன் தான் கட்டியுள்ளோம் எனக் கூறுவார்கள்.


வேளச்சேரியில ஒரு ஏரியவே காணோம்.. எல்லாமே கட்டிடங்கள்.. சாட்டையடி கொடுக்கும் புகைப்படம்!


வேளச்சேரியில ஒரு ஏரியவே காணோம்.. எல்லாமே கட்டிடங்கள்.. சாட்டையடி கொடுக்கும் புகைப்படம்!

நித்யானந்த் ஜெயராம் எழுப்பியுள்ள கேள்வி போல், மழை நீருக்கு சிஎம்டிஏ ஒப்புதல் எல்லாம் தெரியுமா? ஒவ்வொரு முறை சென்னையில் கனமழை பெய்யும் போதும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவை முன்பு நீர் வழித்தடங்களாக இருந்தவை என்பதற்கு மீண்டும் மீண்டும் நிரம்பும் நீரே சாட்சி.  

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்லும் மனிதன் தான் குற்றவாளி. இயற்கை அன்னை ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சரியான தீர்ப்பையே எழுதிக் கொண்டிருக்கிறாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.