மேலும் அறிய

தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்

செப்டம்பர் 6-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தினால், வைரஸ் தொற்று பரவலாகக், குறைப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில், வைக்க தடை விதித்திருந்தாலும் இந்து அமைப்புகள் தடையை மீறி சிலை வைத்திருந்தன. 

தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்
 
இந்நிலையில் தமிழக இந்து மக்கள் கட்சி தலைவரும், நிறுவனருமான அர்ஜுன் சம்பத் இன்று காஞ்சிபுரம் வருகை தந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் ஒரிக்கை மணிமண்டபம் உள்ளிட்டவைகளில் சாமி தரிசனம் செய்தார். 

தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ”இந்து மக்கள் கட்சி சார்பாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட திட்டமிட்டிருந்தோம், தமிழக அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழக அரசோ, தமிழகத்தில்  விநாயகர் சதுர்த்தி விழாவை நடைபெறாமல், தடுப்பதற்காக திட்டமிட்டே கொரோனா பரவலை காரணம் காட்டி தடை விதித்துள்ளனர். மற்ற மதங்களில் நடைபெறும் திருவிழாவிற்கு அனுமதி தரும் அரசாங்கம், திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்த்துப் போராடுவோம்” என தெரிவித்தார்.

தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்
வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி  அனைத்து மாவட்ட  தலைநகரங்களில் விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற , பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அதன்பின் அனுமதி தர மறுத்தால் தடையை மீறி, ஆன்மீக அறவழியில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும் என தெரிவித்தார். தமிழக அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், விவசாய மசோதாவுக்கு எதிரான தீர்மானம், ஆகியவற்றை இயற்றி சட்டமன்ற நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்
 
”தமிழகத்தில் சிறுபான்மை பிரிவு எனக் கூறிக்கொண்டு செயல்படும்  கல்வி நிலையங்களை அரசுடைமையாக்க வேண்டும்” எனவும், ”தனிமனித அந்தரங்கத்தில் அத்துமீறும் யூடியூபர் மதனை காவல்துறையினர் கைதுசெய்ய வேண்டும். ஒருவரின் அந்தரங்கத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, மூன்று மாதங்கள் காத்திருந்ததாக அவரே கூறியுள்ளார்.  மேலும் அவரிடம் 13 வீடியோக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது பாரதமாதா செந்தில், காஞ்சிபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் முத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Embed widget