மேலும் அறிய

நிவாரணம் என்கிற பெயரில் ஆண்டு தோறும் செலவு: நிரந்தர தீர்வுக்கு செலவிடலாமே!

சென்னையில் இனி வரும் களங்களில் வெள்ளம் பாதிக்காமல் தடுக்க தமிழக அரசுக்கு எவ்வளவு கோடி நிதி தேவையாக இருக்கும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் பாதிப்புகளால் பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் 2015 ல் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம், 2016 ல் தாக்கிய வர்தா புயல் , 2018 ல் டெல்டாவை தாக்கிய கஜா புயல் என அடுத்தடுத்தது பல புயல்களை சந்தித்து ஸ்தம்பித்தது. 

அதேபோல், தென் இந்திய கடற்கரை பகுதிகள் கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 300 க்கு மேற்பட்ட புயல்களை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 2010 முதல் 2020 வரை உள்ள காலகட்டங்களில் அரபிக் கடல் ஏழு புயல்களையும், வங்களா விரிகுடா 7 புயல்களையும் கடந்து சென்றுள்ளது. 


நிவாரணம் என்கிற பெயரில் ஆண்டு தோறும் செலவு: நிரந்தர தீர்வுக்கு செலவிடலாமே!

இத்தகைய புயல்களால் தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைமையை சரி செய்ய அப்பொழுது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள், தற்காலிகமாக நிவாரண நிதியை வெளியிடுகின்றனர். இந்த நிதி அறிவிப்பால் மக்களின் நிலைமை சரியாகிறதோ ?  இல்லையோ ? ஆண்டுதோறும்  இந்த மோசமான நிலைமையை தமிழக மக்கள் அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். 

கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மத்திய அரசிடம் இருந்து 1000 கோடி வாங்கி மக்களுக்கு நிவாரண நிதி வழங்கியதாக தெரிகிறது. அதேபோல், தொடர்ந்து அடுத்தடுத்து வந்த புயல்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நிவாரண நிதிகளை அளித்து வந்துள்ளது. ஆனால், இதுநாள் வரை இந்த நிலைமையை முழுமையாக சரி செய்ய எந்தவொரு அரசும் தீர்வு கண்டறியவில்லை. 


நிவாரணம் என்கிற பெயரில் ஆண்டு தோறும் செலவு: நிரந்தர தீர்வுக்கு செலவிடலாமே!

கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு அதிமுக அரசு, சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் நீர் பாதைகள், ஏரிகள் தூர்வாருதல், தேங்கிய நீர்களை வெளியேற்றம் போன்ற துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் பெரிதாக பயனளிக்கவில்லை. 

இதை தொடர்ந்து, கடந்த வாரம் முழுவதும் சென்னையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து,  தமிழ்நாடு அரசு இனி வரும் நாட்களில் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து இன்று அரசாணை வெளியிட்டது. 


நிவாரணம் என்கிற பெயரில் ஆண்டு தோறும் செலவு: நிரந்தர தீர்வுக்கு செலவிடலாமே!

தற்போது, ஆட்சியில் உள்ள திமுக அரசு சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இத்தகைய முயற்சிகள் கைகூடினால் தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும்...? பேரிடர் நிவாரண காலத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு 1000 கோடி வரை நிவாரண நிதியாக பெறுகிறது. சென்னையில் இனி மழைநீர் தேங்காமலும்,  இந்த முழு நிலைமையையும் சரி செய்ய தமிழக அரசுக்கு சுமார் 3000 முதல் 5000 கோடி வரை தேவையாக இருக்கும் என தெரிகிறது. 

தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை மட்டும் கைகூடினால் அடுத்து வரும் ஆண்டுகளில் சென்னை மக்கள் சந்திக்கும் புயலில் இருந்து தப்பிக்கலாம். ஒரு வேளை இந்த நடவடிக்கையும் பயனளிக்கவில்லை எனில் சென்னை மக்களின் நிலமை இன்னும் மோசமாகிவிடும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget