மேலும் அறிய

‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!

உரிய நேரத்தில் உயிரை காக்க உதவி செய்த அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் ஆகியோருக்கு காவல் ஆய்வாளர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வான கார்த்திகை தீப திருவிழாவிற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதலாக வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் கிரிவலம் செல்லவும், மகா தீபத்தை தரிசிக்கவும் கூடுதல் ஏற்பாடுகள் மாவட்டம் சார்பாக செய்யப்பட்டன.‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!

அதன்படி, அருகே இருக்கும் மாவட்ட காவல்நிலையங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் பந்தோபஸ்த் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு முதலுதவி கொடுத்த மருத்துவர்கள் உடனடியாக உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை வேலூருக்கோ அல்லது சென்னைக்கோ மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

இது குறித்து தங்களது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியும், திருவண்ணாமலையில் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவருமான வருண்குமார் ஐ.பி.எஸ்-க்கு சக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை அவசர ஊர்தி வாகனத்தில் ஏற்றி, அதன் முன்னரும் பின்னரும் பாதுகாப்பிற்காகவும், சிரமம் இன்றி அவரை விரைவாக அழைத்து செல்லும் வகையிலும் போலீசாரின் பைலட் வாகனங்களையும் ஏற்பாடு செய்து சென்னைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார்.

‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!
திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமார் IPS

அதன்பின்னர், அமைச்சர்கள் நாசர் மற்றும் சேகர்பாபுவை தொடர்புகொண்டு, உதவி ஆய்வாளருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி. வருண்குமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் இருவரும் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, உதவி ஆய்வாளர் சிதம்பரத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றனர். அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சுயநினைவின்றி கொண்டுவரப்பட்ட உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து மருத்துவர்கள் உயிரை காத்துள்ளனர்.

‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!
 உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை நலம் விசாரிக்கும் அமைச்சர் நாசர்

மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நேரடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கே வந்து அமைச்சர்கள் சேகர்பாபும், நாசரும் உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை நலம் விசாரித்தும் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டு சென்றுள்ளனர்.

‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!
சிகிச்சைகள் பற்றி கேட்டறியும் அமைச்சர் சேகர்பாபு

உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உதவிய அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் மற்றும் திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாருக்கு, உதவி ஆய்வாளர் சிதம்பரம் குடும்பத்தினரும், சக காவலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Embed widget