மேலும் அறிய

இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்மழையால் வடசென்னை முழுவதும் வெள்ளகாடாக மாறியுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலானா இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானாது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கொண்டுள்ளது.குறிப்பாக வடசென்னை பகுதியில் வியாசர்பாடி, திருவிக நகர் போன்ற முக்கிய  இடங்களில் மக்கள் வசிக்கும் இல்ல முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.மேலும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் முழுவதுமே கழிவு நீரும், மழை நீரும் கலந்து மக்களின் இல்லம் முழுவதும்  உள்ளதால் மக்கள் தொற்றுநோய் பரவும் ஒரு அச்சமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.மேலும் இந்த பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 2 அடி முதல் 4 அடி வரை மழை நீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அச்சமான   சூழ்நிலையிலேயே மக்கள் இருந்து வருகிறார்கள். உடனடியாக மாநகராட்சி நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!

வடசென்னை முழுவதுமே பல்வேறு இடங்களில் சாலைகள், தெருக்கள், மக்கள் வசிக்கும் இல்லங்கள், சுரங்கப்பாதைகள் என அனைத்து இடங்களிலும் மழை நீர் கடல் போல் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த ஒரு அச்சமான ஒரு சோதனையில் இருக்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது.. தொடர் மழையால் அனைத்து பகுதிகளுமே தண்ணீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் ,விரைவில் அனைத்துப் பகுதியிலும் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் கூடுதலாக மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிநவீன கருவிகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியையும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என அதிகார தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget