மேலும் அறிய

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் பாதை வழியில் நிற்பதால் பொதுமக்கள் அவதி

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் இன்று பகல் 1:30 மணி அளவில்  தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டு, தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த ரயில் வழக்கமாக தாம்பரத்திற்கு நான்காவது பிளாட்பாரத்தில் வரும்.  எனவே சானடோரியம்- தாம்பரம் இடையே அந்த ரயில் ட்ராக் மாறும் இடத்தில் திடீரென பழுதடைந்து நின்று விட்டது. நீண்ட நேரம் ஆகியும் ரயில் புறப்படவில்லை. பயணிகள் கேட்டபோது ரயில் இப்போது புறப்படாது தாமதமாகும் என்று கூறினார்கள்.
 
இதை அடுத்து சில பயணிகள் அந்த ரயிலில் இருந்து கீழே குதித்து தாம்பரத்துக்கு நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வயதானவர்கள், பெண்கள் உட்பட பெரும்பான்மையான பயணிகள்  ரயிலிலே உட்கார்ந்து இருக்கின்றனர். இதற்கு இடையே அதற்குப் பின்னால் வந்த  சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு-  அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் எட்டாவது பிளாட்பாரத்திற்கு இயக்கப்பட்டது. அதைப்போல் தாம்பரம் கடற்கரை இடையே வழக்கமாக 1,2,3,4  பிளாட்பாரங்களில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும். ஆனால் தற்போது 5,6,7,8  பிளாட்பாரங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
 
இந்த சென்னை கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில்  என்ன காரணத்தால் பழுதடைந்து நிற்கிறது?  என்று எந்த தகவலும் ரயில்வே அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ரயில் பழுதடைந்து விட்டது. அதை சீர் செய்ய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம், விரைவில் அது சீராகிவிடும் என்று கூறுகின்றனர்.  இதனால் சென்னை கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் அவதி அடைந்து வருகின்றனர்
 

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
 
 
மற்றொரு சம்பவமாக காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் ரயில்கள் பாதிப்பு.. பயணிகள் தவிப்பு..
 
காஞ்சிபுரத்தை அடுத்த திருமால்பூரில், இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக தினந்தோறும் பத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. Bஇந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல திருமால்பூரில்  இருந்து வழக்கமாக 7.00 மணி அளவில் புறப்படும் ரயிலானது புறப்பட்டு கூரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பேண்டோ கிராப்  ( pantograph) பழுதின் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.
 
இதனால் காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய இரயிலிவே நிலையங்களுக்கு 7.20 மணிக்கு வரக்கூடிய இரயில்காக மணிக்கணக்கில் காத்திருந்த இரயில் பயணிகள் கோபமடைந்து, இரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 9.30 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்படக்கூடிய இரயில் மூலம் 8.50மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரெயிலானது புறப்பட்ட சற்று நேரத்திலையே  திருமால்பூரிலிருந்து 7.00-க்கு புறப்பட்ட இரயிலானது சுமார் 8.55மணிக்கு காஞ்சிபுரம் புதிய ரெயில்வே வந்தடைந்தது .
 
அதனை 9.30 மணிக்கு இயக்கிட அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றியமைந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் நிலைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தான் பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாக கூறிய நிலையில் இரயில்வே நிலைய ஸ்டேஷன் மேனேஜர் பயணிகளிடம் அதிகார பாணியிலும், தரக்குறைவாகவும் பேசிய நிலையில், இதற்கு இரயில் பயணிகள் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ரயில்கள் தாமதமாக சென்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget