மேலும் அறிய

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,460 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது...!

’’மது மற்றும் அசைவம் சாப்பிடுபவர்கள் ஞாயிறு தடுப்பூசி முகாமை புறக்கணித்த நிலையில் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் மாற்றம்’’

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அசைவ உணவு மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்று கிழமை தடுப்பூசி முகாமில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவது அரசின் கவனத்திற்கு சென்றதால் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை மாற்றியது. 
 
காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,460 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது...!
 
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 7ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அனைத்து வட்டாரத்திலும் நடைபெற்றது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய் துறையினை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 முகாம்களும், 910 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 ஆயிரம் பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,460 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது...!
 
இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 ஆவது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2ஆவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இத்தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
செங்கல்பட்டு 
 
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற உள்ளது. இம்முகாமில் 2320 சுகாதாரப் பணியாளர்கள், 667 முன்களப் பணியாளர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி, செவிலியர் பயிற்சிபள்ளி மாணவர்கள் 1055 பேர் பங்கேற்கின்றனர். இம்முகாமில் இதுநாள் வரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் 2ம் தவணை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
August Car Sale:  ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
August Car Sale: ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
August Car Sale:  ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
August Car Sale: ஆகஸ்டில் கார் விற்பனை எப்படி? மாருதி, ஹுண்டாயில் அசத்தியது யார்? கம்பேக் கொடுத்த டாடா
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
Viral Video: சிக்கி தவித்த மக்கள்.. 20 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்? கடும் போக்குவரத்து நெரிசல்
எந்த கார் வாங்கலாம்? Tata Punch EV யா? Tata Nexon EV யா? இரண்டில் பெஸ்ட் எது?
எந்த கார் வாங்கலாம்? Tata Punch EV யா? Tata Nexon EV யா? இரண்டில் பெஸ்ட் எது?
Coolie Box Office Collection: முக்கி முக்கி 300 கோடியை கடந்த கூலி.. எந்த மாநிலத்தில் ரஜினிக்கு எவ்வளவு வசூல்?
Coolie Box Office Collection: முக்கி முக்கி 300 கோடியை கடந்த கூலி.. எந்த மாநிலத்தில் ரஜினிக்கு எவ்வளவு வசூல்?
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
மதுரை வலையங்குளத்தில் அதிர்ச்சி! டிரம்ஸ் வாசித்த இளைஞர் கொடூர கொலை, காரணம் என்ன?
மதுரை வலையங்குளத்தில் அதிர்ச்சி! டிரம்ஸ் வாசித்த இளைஞர் கொடூர கொலை, காரணம் என்ன?
Embed widget