மேலும் அறிய

கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர்.
 
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதுவரை கடந்த மூன்று மாதத்தில் 60,700 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை தொற்று பாதித்த சுமார் 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது தடுப்பூசி செலுத்தி கொள்வது என்பதால் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைப்பதில் அரசுகள் ஆர்வம்காட்டி வருகின்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்ற மூன்றாம் பாலினர்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மூன்றாம் பாலினர் 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
 
அவர்களுக்கு தடுப்பூசி போடும் முன் உடல் உபாதைகள் ஏதும் உள்ளனவா அல்லது காய்ச்சல் சளி இருமல் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது. இதில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உடலில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள மாத்திரைகளும் வழங்கப்பட்டது. வேறு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
இவ்வாறு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பரவலை முழுவதுமாக ஒழித்துவிடலாம் எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
 
கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். அவர்களில் 48 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். மூன்றாம் பாலினர் நலவாரியம் மூலம் 280 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் 121 பேர் உள்ளனர்.
 
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டமான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத 353 மூன்றாம் பாலினர்களுக்கு முதற்கட்டமாக கோவிட்- 19 நிவாரண நிதியுதவி தலா ரூபாய் 2 ஆயிரம் விகிதம் ரூபாய் 7 லட்சத்து 6 ஆயிரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இதில் 238 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் இரண்டாம் கட்டமாக கோவிட்-19 நிவாரண நிதியுதவி 347 மூன்றாம் பாலினர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 6 இலட்சத்து 94ஆயிரம் ஒதுக்கப்பட்டதில் 190 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Embed widget