![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ripon Building: மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஒளிரும் சென்னையின் முக்கிய இடங்கள்!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம் உள்ளிட்டவை ஊதா நிற மின் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
![Ripon Building: மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஒளிரும் சென்னையின் முக்கிய இடங்கள்! Chennai Ripon Building turns spectacular by night with mesmerising dynamic lighting ahead of physically challenged day Ripon Building: மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஒளிரும் சென்னையின் முக்கிய இடங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/adfb1148189aaf62ede0d012e85a4cc31669904050798571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மாற்று திறனாளிகள் தினத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஆகியவை ஊதா நிற மின் விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.
டிசம்பர் 3ஆம் தேதி "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்"
— மாணிக்க மைந்தன் ❤️ ❤️ (@manickamainthan) December 1, 2022
ஊதா நிற மின்னொளியில் சென்னை ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலத்தை ஜொலிக்க வைத்து, மாற்றுத் திறனாளிகளை கொண்டாடும் தமிழக அரசு pic.twitter.com/4ZyJTx0ZnW
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்:
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது, 1992 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை அனுசரிப்பதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுனுடைய பிரச்னைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், உரிமைகள் மற்றும் நல்வாழ்விற்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள பல அராசங்கங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு வருகின்றன.
தமிழாடு அரசு சார்பில், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையிலான, புதிய பாதையை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. இதை பலரும் வரவேற்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் தேவை:
ஆனால், மெரினா கடற்கரை பாதை போன்று, அனைத்து கடற்கரைகளிலும் அமைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் கழிப்பறை இருப்பது போல், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் திரையரங்குகள், மால் , பேருந்துகள் உள்ளிட்டவைகளில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கு இயலாத இடமாக உள்ளது. ஆகையால், இதுபோன்ற இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
View this post on Instagram
இந்நிலையில், மாற்றுத்திற்னாளிகளுக்கான தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்நாளை நினைவுப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒளிரும் விளக்குகளை, பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
Also Read : வரமாக வந்த கேம்ஸ்.. மாற்றுத்திறனாளிகள் உடற்பயிற்சிக்கு புதிய தெரபி! இதையும் படிங்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)