Chennai Power Shutdown 27.05.25: நாளை சென்னையில் இங்கு தான் மின் தடை! உஷாரா இருங்க மக்களே
Chennai Power Shutdown 27.05.2025: சென்னையில் நாளை பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் குமணன்சாவடு பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 27.05.2025
இந்நிலையில், நாளை(27.05.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை (27.05.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
குமணஞ்சாவடி: அம்பாள் நகர், பூந்தமல்லி பை பாஸ் ரோடு, பரிவாக்கம், பனவீடு தோட்டம், பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி ஆகிய இடங்களில் நாளை 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மின் தடை:
சென்னையில் பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் மின் தடை செய்யப்படாது இந்த நிலையில் நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின் தடை செய்யப்பட்டது.பி -பிளாக், நியூ டைனி செக்டர், 2வது பிரதான பகுதி, சி.டி.எச்., சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மென்ட், பழைய டைனி செக்டர் ஒன்றாவது பிரதான சாலை, ஏ.டி.சி., சாலை, 2வது குறுக்கு தெரு, 3வது தெரு செக்டார்-, கோரமெண்டல் டவுன்,7வது தெரு செக்டர் 3,ஆவின் சாலை சில பகுதிகள் , சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு, 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை, ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டது.
சென்னையில் மின்தடை நேரம்?
இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின் விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.























