Chennai Power Cut: சென்னை வாசிகளே நாளை(15.09.2025) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை திங்கட்கிழமை (15.09.2025) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

Chennai Power Shutdown: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (15.09.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
ரெட்ஹில்ஸ்:
சோத்துபெரும்பேடு, கிருதாலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வள்ளிவயல்.
செம்பியம்:
கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு, வெங்கடேஸ்வரா காலனி 1 முதல் 10வது தெரு, மூலக்கடை, ஆர்.வி.நகர், அன்னை சத்யா நகர், அருள் நகர் மெயின் ரோடு, சீத்தாராம் நகர், எம்.ஆர்.எல். காலனி, காமராஜர் சாலை, சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள், ரிஸ்வான் சாலை, பெரியார் நகர்.






















