Chennai Power Shutdown: ஜனவரி 27-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
Chennai Power Cut(27-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 27-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு
- கால்வாய் வங்கி சாலை
- புற்றுநோய் மருத்துவமனை
- காந்தி நகர்
- கால்வாய் குறுக்குத் தெரு
- விவேக்ஸ் ஷோரூம்
- கிரசண்ட் அவென்யூ
- காமராஜ் கல்லூரி
- பம்ப்பிங் ஸ்டேஷன்
- மலர் மருத்துவமனை
- மல்லிப்பூ நகர்
- கருணாநிதி தெரு
- பாண்டிச்சேரி சாலை
- வரதாபுரம் லேக் வியூவ் சாலை
- இந்திரா நகர்
- காமராஜ் அவென்யூ
- டீச்சர்ஸ் காலனி
- ஜஸ்டிஸ் ராமசம் அவென்யூ
- கஸ்தூரிபாய் நகர்
- ஈசிஆர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
வடபெரும்பாக்கம்
- சி.எம்.டி.ஏ.,
- குரு ராகவேந்திரா நகர்
- சீனிவாச நகர்
- நடராஜ் நகர்
- 200 அடி சாலை
- ஆதிநாத் நகர்
- இபிஎம்(EBM) நதி
- ஜி ஸ்கொயர்
- வள்ளி பூங்கா
- ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை
- ஏரிக்கரை
- பாலாஜி நகர்
- ஓமக்குளமேடு
- கில்பர்ன் நகர்
- ஆர்ஆர் நகர்
- சாரங்கபானி நகர்
- சண்முக சுந்தரம் நகர்
- சீதாபதி 1 முதல் 5-வது தெரு
- MRH சாலை
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















