Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(14-11-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், நவம்பர் 14-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IT காரிடார்
- எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம்
- ஃபவுண்டரி சாலை
- பிள்ளையார் கோவில் தெரு
- எஸ்பிஐ காலனி
- கங்கை அம்மன் கோயில் தெரு
- 200 அடி ரேடியல் சாலை
- போஸ்ட் ஆபிஸ் தெரு
- வேம்புலியம்மன் கோயில் தெரு
- தேரடி தெரு
- பஞ்சாயத்து சாலை
- குளக்கரை தெரு
- ஆறுமுகம் அவென்யூ
- குமரன் நகர்
- ஆனந்த் நகர்
- ஆர்.இ. நகர்
- பாலாஜி நகர்
- விநாயகா நகர்
- சாய் நகர்
- மேபிள் அவென்யூ
- செல்வகணபதி அவென்யூ
- சரவணா நகர்
- செல்வக்குமார் அவென்யூ
- சீவரம்
- தணிகாசலம் தெரு
- ராமச்சந்திரன் தெரு
- காமராஜ் தெரு
- இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை
- எம்.ஜி. சாலை
- பாலவிநாயகர் அவென்யூ
- பிரகாசம் தெரு
- எல்லையம்மன் நகர்
- ஸ்ரீபுரம் சாலை
- ராமன் நகர்
- ஓஎம்ஆர்
- திருமலை நகர் அனெக்ஸ்
- ராமப்பா நகர்
- சிபிஐ காலனி
- ராஜீவ் நகர்
- வேளச்சேரி மெயின் ரோடு
- ஐஐடி காலனி
- மீனாட்சி புரம்
- மனோகர் நகர்
- விஜிபி சாந்தி நகர்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















