Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Chennai Power Shutdown (08-07-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(08.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 8-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிவாக்கம்
- திருவள்ளுவர் நகர் 1-வது பிரதான சாலை
- திருவள்ளுவர் நகர் 3-வது முதல் 6-வது பிரதான சாலை
- திருவள்ளுவர் நகர் 7-வது முதல் 33-வது குறுக்குச் சாலைகள்
- 1-வது மற்றும் 3-வது அவென்யூ
- வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் H12 முதல் H40 மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும்.
பெசன்ட் நகர்
- சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ
- சாஸ்திரி நகர் 1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெருக்கள்
- 9-வது லேன்
- ஜீவரத்னம் நகர் 1-வது பிரதான சாலை
- தொலைபேசி நிலையம்
- வணிக வளாகம்
நொளம்பூர்
- மேற்கு முகப்பேர் 5 முதல் 8-ம் பிளாக்குகள்
- கவிமணி சாலை
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















