மேலும் அறிய

மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: ரோப் வே திட்டம் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்!

"மாமல்லபுரத்தில் போக்குவரத்திற்காக ரோப் வே அமைய உள்ளது இரண்டு வழித்தடங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை தீவிர படுத்தியுள்ளது"

"சென்னை மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் "ரோப் வே", உயர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை தயார் செய்து வருகிறது" 

சுற்றுலா நகரமான மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகாபலிபுரம், கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு மகாபலிபுருவத்திற்கு வருகை தருகின்றனர். 

போக்குவரத்தின நெரிசல் 

மகாபலிபுரத்தை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் மகாபலிபுரத்திற்கு, வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால், மகாபலிபுரம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும், என்ற கோரிக்கை நீண்ட காலமாக மகாபலிபுரம் மக்களிடையே இருந்து வருகிறது. ஒருபுறம் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

ரோப் வே திட்டம் 

மகாபலிபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கவும், போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் குறுகிய தொலைவில் இயக்கப்படும், ரோப் வே எனப்படும் உயர் போக்குவரத்து வழித்தடம் ஏற்படுத்தப்படும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்வதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட்டின் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குடும்பம் 2025 - 2045 மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி திட்டத்திற்கான, ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 21-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடத்தியது. அப்போது புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, தற்போதைய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை கோவில் பகுதி வரை ஒரு வழித்தடமும், புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம் வழியாக 5 ரதங்கள் சிற்பங்களுக்கு செல்வதற்கு வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்கள் ரோப் வே என சொல்லக்கூடிய உயர்மட்ட போக்குவரத்து வழித்தடமாக அமைய உள்ளது. 

வழித்தடம் எப்படி இருக்கும்? 

புதுச்சேரி சாலை சந்திப்பில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, பகிஹாம் கால்வாய் சாலை வழியாக 5 ரதம் செல்லும் வகையில் ஒரு வழித்தடம் அமைக்கப்படும். புதுச்சேரி சந்திப்பு சாலையிலிருந்து தொடங்கி மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை ஒரு வழித்தடம் அமைக்கப்படும். அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக கடற்கரை கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த ரோப் வே என சொல்லக்கூடிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு மிகப்பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சுற்றுலாப் பயணிகளை இந்த "ரோப் வே" திட்டம் கவர்ந்து ஈர்க்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏற்கனவே மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டின் அவர்கள் அதிக அளவு வருகை தருகின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தும் போது சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
ஆபாச பேச்சுகளால் தவெக-வை விட்டு விலக பயப்படும் பெண்கள்.. எதையும் கண்டுக்காத விஜய் - ரஞ்சனா நாச்சியாரின் பகீர் குற்றச்சாட்டு
ஆபாச பேச்சுகளால் தவெக-வை விட்டு விலக பயப்படும் பெண்கள்.. எதையும் கண்டுக்காத விஜய் - ரஞ்சனா நாச்சியாரின் பகீர் குற்றச்சாட்டு
காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
Embed widget