மேலும் அறிய

மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: ரோப் வே திட்டம் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்!

"மாமல்லபுரத்தில் போக்குவரத்திற்காக ரோப் வே அமைய உள்ளது இரண்டு வழித்தடங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை தீவிர படுத்தியுள்ளது"

"சென்னை மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் "ரோப் வே", உயர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை தயார் செய்து வருகிறது" 

சுற்றுலா நகரமான மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகாபலிபுரம், கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு மகாபலிபுருவத்திற்கு வருகை தருகின்றனர். 

போக்குவரத்தின நெரிசல் 

மகாபலிபுரத்தை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் மகாபலிபுரத்திற்கு, வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால், மகாபலிபுரம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும், என்ற கோரிக்கை நீண்ட காலமாக மகாபலிபுரம் மக்களிடையே இருந்து வருகிறது. ஒருபுறம் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

ரோப் வே திட்டம் 

மகாபலிபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கவும், போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் குறுகிய தொலைவில் இயக்கப்படும், ரோப் வே எனப்படும் உயர் போக்குவரத்து வழித்தடம் ஏற்படுத்தப்படும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்வதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட்டின் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குடும்பம் 2025 - 2045 மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி திட்டத்திற்கான, ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 21-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடத்தியது. அப்போது புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, தற்போதைய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை கோவில் பகுதி வரை ஒரு வழித்தடமும், புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம் வழியாக 5 ரதங்கள் சிற்பங்களுக்கு செல்வதற்கு வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்கள் ரோப் வே என சொல்லக்கூடிய உயர்மட்ட போக்குவரத்து வழித்தடமாக அமைய உள்ளது. 

வழித்தடம் எப்படி இருக்கும்? 

புதுச்சேரி சாலை சந்திப்பில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, பகிஹாம் கால்வாய் சாலை வழியாக 5 ரதம் செல்லும் வகையில் ஒரு வழித்தடம் அமைக்கப்படும். புதுச்சேரி சந்திப்பு சாலையிலிருந்து தொடங்கி மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை ஒரு வழித்தடம் அமைக்கப்படும். அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக கடற்கரை கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த ரோப் வே என சொல்லக்கூடிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு மிகப்பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சுற்றுலாப் பயணிகளை இந்த "ரோப் வே" திட்டம் கவர்ந்து ஈர்க்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏற்கனவே மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டின் அவர்கள் அதிக அளவு வருகை தருகின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தும் போது சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget