மேலும் அறிய

மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: ரோப் வே திட்டம் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்!

"மாமல்லபுரத்தில் போக்குவரத்திற்காக ரோப் வே அமைய உள்ளது இரண்டு வழித்தடங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை தீவிர படுத்தியுள்ளது"

"சென்னை மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் "ரோப் வே", உயர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை தயார் செய்து வருகிறது" 

சுற்றுலா நகரமான மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகாபலிபுரம், கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு மகாபலிபுருவத்திற்கு வருகை தருகின்றனர். 

போக்குவரத்தின நெரிசல் 

மகாபலிபுரத்தை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் மகாபலிபுரத்திற்கு, வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால், மகாபலிபுரம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும், என்ற கோரிக்கை நீண்ட காலமாக மகாபலிபுரம் மக்களிடையே இருந்து வருகிறது. ஒருபுறம் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

ரோப் வே திட்டம் 

மகாபலிபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கவும், போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் குறுகிய தொலைவில் இயக்கப்படும், ரோப் வே எனப்படும் உயர் போக்குவரத்து வழித்தடம் ஏற்படுத்தப்படும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்வதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட்டின் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குடும்பம் 2025 - 2045 மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி திட்டத்திற்கான, ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 21-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடத்தியது. அப்போது புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, தற்போதைய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை கோவில் பகுதி வரை ஒரு வழித்தடமும், புதுச்சேரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம் வழியாக 5 ரதங்கள் சிற்பங்களுக்கு செல்வதற்கு வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்கள் ரோப் வே என சொல்லக்கூடிய உயர்மட்ட போக்குவரத்து வழித்தடமாக அமைய உள்ளது. 

வழித்தடம் எப்படி இருக்கும்? 

புதுச்சேரி சாலை சந்திப்பில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, பகிஹாம் கால்வாய் சாலை வழியாக 5 ரதம் செல்லும் வகையில் ஒரு வழித்தடம் அமைக்கப்படும். புதுச்சேரி சந்திப்பு சாலையிலிருந்து தொடங்கி மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை ஒரு வழித்தடம் அமைக்கப்படும். அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக கடற்கரை கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த ரோப் வே என சொல்லக்கூடிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு மிகப்பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சுற்றுலாப் பயணிகளை இந்த "ரோப் வே" திட்டம் கவர்ந்து ஈர்க்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏற்கனவே மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டின் அவர்கள் அதிக அளவு வருகை தருகின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தும் போது சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை வாசிகளே உஷார் !! நாளை மறுநாள் ( ஜூலை 24 ) 5 மணி நேரம் மின்தடை - முழு விவரம்
சென்னை வாசிகளே உஷார் !! நாளை மறுநாள் ( ஜூலை 24 ) 5 மணி நேரம் மின்தடை - முழு விவரம்
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
" மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ் " அதிகாரிகளின் அலட்சியம் – இளைஞர் வேதனை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget