மேலும் அறிய

பெருங்களத்தூர் To செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் இதை கவனித்தீர்களா? - 7 இடங்களில் வருவது என்ன?

GST Road new pedestrian bridges: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு இடையே ஏழு இடங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து செல்பவர்களுக்கும் மற்றும் சென்னைக்கு வருபவர்களுக்கும் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

உள்ளூர் மக்கள் பாதிப்பு 

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால், உள்ளூர் மக்கள் கடும் பாதிப்படைய தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாலை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த சாலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருவதால் சென்னை உள்பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

பொதுமக்கள் கோரிக்கை 

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இந்த வழியாக புறநகர் ரயில் சேவையும் சென்று வருகிறது. இந்தநிலையில் இந்த சாலையைக் கடப்பதற்கு, சுரங்க பாதையோ அல்லது நடை மேம்பாலங்களோ இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே, முக்கிய இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் கோரிக்கை வைத்து வந்தனர்.

7 இடங்களில் நடைமேம்பாலங்கள்

இதனைத் தொடர்ந்து வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை எந்த பகுதிகளில், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறங்கியது.

பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக் பார்க், பொத்தேரி வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர் ஜங்ஷன், மறைமலை நகர் டவுன்ஷிப், சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்குள் அனைத்து நடை மேம்பாலங்களும் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget