மேலும் அறிய

திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்

Chennai ECR Road Car Chase Issue: சென்னை ஈசிஆர்_ல், பெண்கள் சென்ற காரை, திமுக கொடி பொருத்திய காரில் இருந்த இளைஞர்கள், துரத்திய விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடியுடன் இருந்த காரில் இருந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 2 கார்கள் பற்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திமுக கொடி பொருத்திய காரை, கிழக்கு தாம்பரத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த காரை சந்துரு என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் சந்துரு வீட்டில் இல்லாத காரணத்தால் , உறவினர்களிடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்றொரு காரில் இருந்த இளைஞர்களையும், காரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் , சென்னை தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய கார்

கடந்த ஜனவரி 25ஆம் தேதி நள்ளிரவில், சென்னை ஈசிஆர் சாலையில், காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது போன்ற, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்னர், இரு தரப்பினரும் சமாதானம் ஆகியதாகவும், இதையடுத்து, அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இந்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், தற்போது திமுக கொடி பொருத்திய காரை, கிழக்கு தாம்பரத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த காரை சந்துரு என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் சந்துரு வீட்டில் இல்லாத காரணத்தால் , உறவினர்களிடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்றொரு காரில் இருந்த இளைஞர்களையும், காரையும் காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget