மேலும் அறிய

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடற்கரை - எழும்பூர் இடையே 4ஆவது ரயில் பாதை பணிகளுக்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்:

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் ரயில் சேவை தொடக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதலில் இயக்கப்பட்டது. பின்னர், வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

இதில் நாள்தேறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலில் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு 9 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன.

பறக்கும் ரயில் சேவை:

இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 4ஆவது ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்க முடியாமல் இருந்து வந்தது.

எனவே, சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன. 

இந்த நிலையில், ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் மீண்டும் தொடக்கம்!
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் மீண்டும் தொடக்கம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?Sellur Raju  | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் மீண்டும் தொடக்கம்!
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் மீண்டும் தொடக்கம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
Breaking News LIVE 28th OCT 2024: 234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
Breaking News LIVE 28th OCT 2024: 234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
'சாதி பேர வச்சி திட்றாங்க சார்' பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி நம்பிக்கை இல்ல தீர்மானம்... விழுப்புரத்தில் பரபரப்பு
'சாதி பேர வச்சி திட்றாங்க சார்' பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி நம்பிக்கை இல்ல தீர்மானம்... விழுப்புரத்தில் பரபரப்பு
TNPSC Group 4 Result: எவ்வளவு வேகம்? 92 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி பெருமிதம்!
TNPSC Group 4 Result: எவ்வளவு வேகம்? 92 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி பெருமிதம்!
Group 4 Vacancies: தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா?
Group 4 Vacancies: தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா?
Embed widget