மேலும் அறிய

வங்கி பூட்டை உடைத்தபோது அடித்த அலாரம் - தப்பியோடும் போது சிக்கிய நேபாளிகள்

வங்கியில் அலாரம் அடித்து உள்ளது அதன் பின்பு வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் தனியார் நிதி நிறுவன வங்கி செயல்பட்டு வருகிறது.  வழக்கம் போல பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் வங்கியில் இருந்து அலாரம் அடிப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது முன்பக்கம் எந்தவித பூட்டும் உடைக்கப்படாமல் இருந்தது இதனையடுத்து பின்புறம் சென்று பார்த்தபோது வங்கியின் ஜன்னலை உடைத்து வெளியே இரண்டு நபர்கள் தப்பி ஓடுவது தெரிய வந்தது. அவர்களில் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்தனர்.

வங்கி பூட்டை உடைத்தபோது அடித்த அலாரம் - தப்பியோடும் போது சிக்கிய நேபாளிகள்
 
அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில்  நேபாளத்தைச் சேர்ந்த சாகர் பகதூர் வயது 30 என்பதும் வங்கியில் கொள்ளையடிக்க தனது நண்பருடன் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அதே பகுதியில் பதுங்கியிருந்த தான் பகதூர் 40 என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அங்கு இவர்கள் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வங்கியில் பின் பக்க ஜன்னலை உடைத்து உள்ளே செல்லும் போது அந்த வங்கியில் அலாரம் அடித்து உள்ளது அதன் பின்பு வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் திருடியவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
மதுபோதை தலைக்கேறியதால் போலிசின் விரலை கடித்த வழக்கறிஞர்
 
சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் குடித்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் ஆகியோர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சுரேஷ்குமார் என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வர முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
 

வங்கி பூட்டை உடைத்தபோது அடித்த அலாரம் - தப்பியோடும் போது சிக்கிய நேபாளிகள்
 
இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் 2 ஆவது சந்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கமார்  (29) என்பதும் மேலும் இவர் வழக்கறிஞராக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்ததால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய போலீசார் முற்பட்டபோது காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டார். அப்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் பாபு என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கை  விரல்களை கடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாபுவை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
Virat Kohli Injured : காயமடைந்த விராட் கோலி... இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்
Virat Kohli Injured : காயமடைந்த விராட் கோலி... இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
Virat Kohli Injured : காயமடைந்த விராட் கோலி... இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்
Virat Kohli Injured : காயமடைந்த விராட் கோலி... இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்
LIVE | Kerala Lottery Result Today (09.03.2025): அக்சயாவில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (09.03.2025): அக்சயாவில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
IND vs NZ: ரோகித் பாய்ஸ்  ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
Embed widget