சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை (ஆகஸ்ட் 17 - ஞாயிறு) முதல் தேனாம்பேட்டை பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 3.2 கிலோமீட்டர் நீளத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் காரணமாக அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தியும் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், சோதனை அடிப்படையில் நாளை (ஆகஸ்ட் 17 - ஞாயிறு) முதல் தேனாம்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றங்கள்:
-
சைதாப்பேட்டை → அண்ணா மேம்பாலம்: சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை-எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, தியாகராய சாலை மா.போ.சி சிலை சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலது பக்கம்), பின்னர் விஜயராகவா சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.
-
அண்ணாசாலை → தி.நகர்: அண்ணாசாலையிலிருந்து தியாகராய நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலது பக்கம் திரும்பி தியாகராய சாலை வழியாக செல்ல வேண்டும்.
-
தி.நகர் → அண்ணாசாலை: தியாகராயநகரிலிருந்து அண்ணாசாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், மா.போ.சி சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வடக்கு போக் சாலை மற்றும் விஜயராகவா சாலை வழியாக செல்லலாம்.
🚧 Traffic Diversion Alert 🚧
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 15, 2025
Due to the construction work for a 3.2 km flyover on Mount Road, traffic diversions will be in place near #Teynampet from 17.08.2025 on a trial basis.#ChennaiTraffic #TrafficUpdate pic.twitter.com/WfuHEGKTu0
-
தெற்கு போக்குவரத்து: தெற்கு போகும் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், மா.போ.சி சிலை சந்திப்பில் வலது பக்கம் திரும்ப அனுமதிக்கப்படாது. பதிலாக, நேராக வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலையை அடைந்து அண்ணாசாலை நோக்கிச் செல்ல வேண்டும்.
-
அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, விஜயராகவா சாலை நோக்கி வலது பக்கம் திரும்ப அனுமதி இல்லை.
இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்துகாவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.






















