மேலும் அறிய

நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு மயங்கிய பயணி.. தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய காவலர்..!

நள்ளிரவில் தொடர்வண்டியில் அடிபட்ட பயணியை தன் தோளில் தூக்கி வந்த காவலருக்கு கூவியும் பாராட்டுக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், நேற்று அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவரை, நள்ளிரவில் தனது தோளில் தூக்கி வந்த காவலருக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நன்றியை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் கந்தன் வயது (19) . இவர் சென்னையில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு இரவு தாம்பரத்திலிருந்து, நெல்லைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் பயணம் செய்துள்ளார். முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் கந்தன் பயணம் செய்துள்ளார். 

நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு மயங்கிய பயணி.. தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய காவலர்..!
 
எனவே கந்தன் ஆபத்தான முறையில் கதவின் அருகே அமர்ந்து வந்ததாக  தெரிகிறது. தொடர்வண்டி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் அருகே வந்த பொழுது, நள்ளிரவு பத்து மணி அளவில் எதிர்பாராத விதமாக கந்தனின் கால் பிளாட்பாரம் ஒன்றில் மோதி உள்ளது. வலியால் துடித்த கந்தன் தொடர் வண்டியில் கத்தியுள்ளார். இதனை அடுத்து அடுத்து நிறுத்தமான செங்கல்பட்டில் தொடர் வண்டி நின்றுள்ளது. 

நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு மயங்கிய பயணி.. தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய காவலர்..!
 
அடிப்பட்ட கந்தன், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வருவதற்குள் ரத்தம் அதிகம் வெளியேறி சுயநினைவு இன்றி இருந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டு, காவலர் மற்றும் தொடர்வண்டி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் பணியில் இருந்த காவலர் தயாநிதி என்பவர் உடனடியாக, மயங்கி விழுந்திருந்த கந்தனை சற்றும் யோசிக்காமல் தோளில் தூக்கிக்கொண்டு உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆறாவது நடைமேடையில் இருந்து தொடர்வண்டி நிலையம் நுழைவு வாயில் வரை தூக்கி வந்துள்ளார்.  காவலரின் துரித நடவடிக்கையால் உடனடியாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலரின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு மயங்கிய பயணி.. தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய காவலர்..!
 
இதுகுறித்து காவலர் செல்வராஜை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நெல்லை எக்ஸ்பிரஸில் வந்த பயணி ஒருவர் மயங்கி விழுந்து இருந்தால் அவருக்கு காலில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. உடனடியாக இதுகுறித்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆறாவது பிளாட்பார்மில் தொடர்வண்டி நின்று இருந்ததால், மயங்கி விழுந்த இளைஞரை தூக்கி கொண்டு வேகமாக ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி இளைஞரை காப்பாற்றினோம் என தெரிவித்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget