மேலும் அறிய

'தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக' திருப்போரூர் சேர்மன் மீது பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார்

"தன்னை ஒருமையில், பேசுவதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் இணைந்து பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், 43 தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன் என்பவரை திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இதயவர்மன் பணி செய்யவிடாமல் தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் புகார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். இன்று திங்கட்கிழமை என்பதால், மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனுவை அளித்திருந்தார்.

தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக' திருப்போரூர் சேர்மன் மீது பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார்
 
அந்த புகார் மனுவில், தண்டரை ஊராட்சி மன்ற பெண் தலைவரை அடிமைப்படுத்தும் விதமாக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி செயல்படுவதாகவும், இருவரும் சேர்ந்து கொண்டு பெண் தலைவரை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு, தண்டரை ஊராட்சியில் ஏரி வேலையில் பணி தள பொறுப்பாளராக தண்டரை ஊராட்சி மன்ற தலைவரை மீறி தனக்கு ஆதரவாகனவர்களை வேளையில் அமர்த்தி செயல்பட முற்பட்ட பொழுது, தண்டரை ஊராட்சி மன்ற தலைவராகிய ஜெயலட்சுமி இதுகுறித்து திருப்போரூர் பெருந்தலைவரிடம் வேலை பிரச்சனை முறையிட்ட பொழுது தண்டரை ஊராட்சி மன்ற தலைவரை மீறி நான் தன்னிச்சையாக செயல்படுவேன் என்றும்,
 

தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக' திருப்போரூர் சேர்மன் மீது பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார்
 
என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்றும் தரை குறைவான வார்த்தைகள் உரிமையில் பேசி பெண் தலைவர் என்று பாராமல், "  நீ பொம்பளையா இல்லன்னா நான் என்ன செய்வேன் என்று தெரியாது என்று கடுமையான கொச்சை வார்த்தைகளை சொல்லி மிரட்டி அலுவலகத்தை விட்டு விரட்டினார் " என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் புகார் மனுவில் என்னை பணி செய்யவிடாமல் தடுப்பது , தலைவர் கடமை செய்யாமல் தடையாக இருக்கின்ற திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் அவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி ஆகிய 20 மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக' திருப்போரூர் சேர்மன் மீது பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார்
 
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவியிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம். 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை மாற்ற வேண்டுமென கூறி ஊர் மக்களுடன் இணைந்து, ஊராட்சி மன்ற தலைவர் என்னை பார்க்க வந்தார் அதை தவிர வேறு எதுவும் நான் அவரிடம் பேசவில்லை, புகார் வந்ததாக தகவல் வந்திருக்கிறது ஆனால் அதை அவர்கள் நிரூபிக்கட்டும் என தெரிவித்தார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget