மேலும் அறிய

நிம்மதி அடைந்த செங்கல்பட்டு மக்கள்.. கால்நடைகளை தாக்கிய மர்ம விலங்கை கண்டுபிடித்த சிசிடிவி..!

சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை என அப்பகுதியில் வைத்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன

மர்ம விலங்கு நடமாட்டம்
 
செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வளர்த்து வரும் கன்றுக்குட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம விலங்கால் கடிபட்டு உயிரிழந்தது. நேற்று முந்தினமும், ஒரு கன்றுக்குட்டி இதேபோல் பலியானது. இதனால் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதேபோல் கடந்த 18-ம் தேதி செங்கல்பட்டு அருகே அஞ்சூர் கிராமத்தில் புதுப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் பசுமாடும் நள்ளிரவில் வாய் மற்றும் தொடை பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது
 

நிம்மதி அடைந்த செங்கல்பட்டு மக்கள்.. கால்நடைகளை தாக்கிய மர்ம விலங்கை கண்டுபிடித்த சிசிடிவி..!
 
சிறுத்தை  நடமாட்டம் ?
 
தென்மேல்பாக்கத்தில் இதே பாணியில் கன்றுக்குட்டி ஒன்றும் மர்ம விலங்கு மூலம் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது. கன்றுக்குட்டிகள் உயிரிழந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சிறுத்தை புலியின் நடமாட்டமாக இருக்கலாம் என சமூக வலைதளத்தில் இது குறித்த புகைப்படங்கள் வைரலாக பரவியது.

நிம்மதி அடைந்த செங்கல்பட்டு மக்கள்.. கால்நடைகளை தாக்கிய மர்ம விலங்கை கண்டுபிடித்த சிசிடிவி..!
 
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே அஞ்சூர் மற்றும் ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தைப் புலி நடமாட்டம் அதிகமாக இருந்தது அப்போது நாய், மற்றும் மாடுகளை கடித்து கொன்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறுத்தை குறித்து அச்சத்துடன் இருந்து வந்தனர். இதனால் இதுகுறித்து வனத்துறைக்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை
 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை, வனத் துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் நேற்று முகாமிட்டனர். உயிரிழந்த கன்றுக்குட்டிகள் எப்படி இறந்தது, எந்த விலங்கு கடித்தது என விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் இருந்து வந்தனர். 
 

நிம்மதி அடைந்த செங்கல்பட்டு மக்கள்.. கால்நடைகளை தாக்கிய மர்ம விலங்கை கண்டுபிடித்த சிசிடிவி..!
 
மக்களுக்கு நிம்மதி
 
இந்நிலையில், வனத்துறையினர் வைத்த கண்காணிப்பு கேமிராவில் அப்பகுதியில் சுற்றித்திரியும், தெரு நாய்கள் கூட்டமாக வந்து தொழுவத்தில், கட்டியிருக்கும் மாடுகளை கடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்ட கேமிராக்களை வனத்துறையினர் அகற்றினர். மேலும் அப்பகுதியில் மாடுகளை கொல்லும், தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
Embed widget