மேலும் அறிய

'பணம் இல்லை கூறிய அதிகாரிகள்'; 20 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொடுத்து அதிர்ச்சி அளித்த பாமகவினர்...!

மாமல்லபுரம் அருகே தேவனேரி பகுதியில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற மின்வாரிய உதவி பொறியாளர் 20 ஆயிரம் கேட்டதால் நூதன முறையில் வழங்கிய பாமகவினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதியில், பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர். அதை ஊர் மக்கள் சார்பிலும், அந்தப் பகுதியில் பிரதான கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மாமல்லபுரத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

பணம் இல்லை கூறிய அதிகாரிகள்'; 20 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொடுத்து அதிர்ச்சி அளித்த பாமகவினர்...!
 
குறிப்பாக தற்பொழுது காலாண்டு தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு நேரங்களில் அடிக்கடி பழுது காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  தேர்வு நேரத்தில் கூட பகுத்தறிந்த மின்மாற்றியை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மின்மாற்றியை மாற்ற வேண்டுமானால், 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வேலை ஆட்கள் தேவை என்றும், அதற்கு அலுவலகத்தில் பணம் இல்லை என மாமல்லபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் கூறியதாக சொல்லப்படுகிறது.

பணம் இல்லை கூறிய அதிகாரிகள்'; 20 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொடுத்து அதிர்ச்சி அளித்த பாமகவினர்...!
 
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் மாமல்லபுரத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டிலும், வசூல் செய்து சில்லறை நாணயங்களாக மாற்றி தாம்பூலத்துடன் சேர்த்து உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர், காயார் ஏழுமலை தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அடுத்து மின்சார வாரியத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி, அங்கிருந்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று அதிகாரிகள் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பணம் இல்லை கூறிய அதிகாரிகள்'; 20 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொடுத்து அதிர்ச்சி அளித்த பாமகவினர்...!
 
பின்னர் பொறியாளர் கேட்ட பணத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி அமைத்து, இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு வெளிச்சத்தை தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகரன் மற்றும் NS ஏகாம்பரம், PVK வாசு உள்ளிட்ட பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பணம் இல்லை கூறிய அதிகாரிகள்'; 20 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொடுத்து அதிர்ச்சி அளித்த பாமகவினர்...!
 
மின்சாரத்துறை விளக்கம்
 
இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்தை  ஏபிபி சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்து புகார் வந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. திங்கட்கிழமை, சிறிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதனை அடுத்து உடனடியாக செவ்வாய்க்கிழமை இதற்கான வேலை துவங்கப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு வேலை நிறைவடைந்தது. ஆனால் வேலை செய்ய சென்ற நபர்களுக்கும், உள்ளூர் காரர்களுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மக்கள் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget