மேலும் அறிய

Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு..! சென்னைவாசிகளே உஷார்..! தயார் நிலையில் மீட்புக் குழு..!

மாண்டஸ் புயலால் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான கனமழை நேற்றிலிருந்து பெய்து வருகிறது. 

இதனால்,மாண்டஸ் புயலினால் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று மதியம் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இன்று(9-12-22) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி நீர்வெளியேற்றப்படும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும்  மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தற்போது முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழைப்பொழுவு அதிகமாக இருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. 

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், புழல் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால், இன்று மதியம் முதல் கட்டமாக, ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த நீர்மட்டம் என்பது 21 அடி, இன்று காலை நிலவரப்படி ஏரியில் 17 அடி நிரம்பி இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 140 கன அடி நீர் வந்துகொண்டு இருந்தது. 

இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்தும் முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழைப்பொழுவு அதிகமாக இருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. 

இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget