மேலும் அறிய

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வைத்த கேள்வி..

ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. அங்கு நடத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறாக இந்த குறுகிய இடத்தில் நடத்துவதற்கான அவசியம் என்ன ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து நாகர்கோயில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து நாகர் கோயில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்பாக மேடையில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் :

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரிய வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்து நாம் பார்க்க முடியும். முன்பு எல்லாம் புல்லட் ட்ரெயின் சினிமா மற்றும் பேப்பரில் மட்டும்தான் பார்ப்போம் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால்தான், இன்று சென்னைக்கும் நாகர்கோயிலுக்கும் மதுரைக்கும் பெங்களூருவுக்கும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளது, ஏற்கனவே சென்னை மைசூர் வழியே ஒரு சேவை இருக்கிறது மேலும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் இருக்கிறது சென்னையில் இருந்து திருப்பதி வழியாக விஜயவாடாவிற்கு வந்தே பாரத் இருக்கிறது, இப்படி சென்னை மையமாக வைத்தே வந்தே பாரத் எண்ணிக்கை மிக வேகமாகவும் மாணவர்கள் மக்கள் வியாபாரிகள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக உள்ளது.

காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்று விடலாம் மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம் இப்படிப்பட்ட சிறப்பான ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சருக்கு இதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும் அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார், கடந்த பட்ஜெட்டில் கூட 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வேயின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சி மூன்றாவது முறை பிரதமர் தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார்கள்.. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்சியில் மும்மடங்கு தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் ரயில்வேவில் செயல்பாடாக இருக்கிறது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியதாவது ; 

தமிழகத்தில் கிராமங்களில் கூட போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து வருகிறது.டாஸ்மாக் மற்றும் கஞ்சா போன்ற பொருட்களினால் ஒவ்வொரு கிராமங்களில் இருப்பதிலிருந்து 30 பேர் இளம் விதவையாக இருந்து வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. போதை பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும்.

விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது நமது பொறுப்பு கடமை ஆனால் சென்னையின் மையமான பகுதியில் நடத்த வேண்டுமா ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது அங்கு நடத்தாமல் இங்கு போக்குவரத்திற்கு இடையூறாக இந்த குறுகிய இடத்தில் நடத்துவதற்கான அவசியம் என்ன? சென்னையின் மையமான பகுதியில் கார் பந்தயம் நடக்கிறது என மையப்படுத்தி கூறுவதை தவிர்க்கவும் ஐந்தாண்டுகளில் சென்னை பெங்களூரு இணையக் கூடிய சூழ்நிலை தான் இருந்து வருகிறது எனவே சென்னையை சுருக்கி விட முடியாது. இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் நடத்தி இருந்தால் அதிக அளவில் பங்கேற்று இருப்பார்கள் யாருக்கும் எந்த இடையூறும் இருந்திருக்காது.

தமிழ் ஆங்கிலம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறுகிறதே தவிர, இந்தியை புகுத்தவில்லை.தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் கற்றுக் கொடுப்பதினால் தமிழுக்கு தான் பெருமை மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசிற்கு எந்த ஒரு தடையும் கிடையாது.

நானும் SC/ST ஆணையத்தில் இருந்தேன், இது போன்ற வார்த்தைகளை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என்றும் அட்டவணை படுத்தபட்ட சமுதாயத்தை இழிவாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget