மேலும் அறிய

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.  ரயில் பயணிகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.


எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு

இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.சென்னையில் இரவு நேர புறநகர் ரயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

குறிப்பாக கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் பயணிப்பவர்கள் முன்கூட்டியே பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு

அதன்படி, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு தாம்பரம் நோக்கி இயக்கப்படும் இமு ரயில்கள் பாதிக்கப்படுகின்றன. வாரத்தின் மற்ற நாட்களில் 3 இமு ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சில இரவு நேர புறநகர் ரயில்கள் முழு வழித்தடத்தில் செல்லாமல், சென்னை கடற்கரை–தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை–கூடுவாஞ்சேரி வரை மட்டுமே பகுதியளவில் இயக்கப்படும்.

மேலும், எழும்பூர் நிலையப் பணிகளின் காரணமாக சில விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படுவதற்கும், இரண்டு விரைவு ரயில்களின் வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது ரயில் சேவை விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையெனில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் புறநகர் ரயில்களை பயன்படுத்துவோர் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget