மேலும் அறிய

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்....அதிரடியில் இறங்கிய போலீஸ்; 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..!

ஏ சி டி சி நிறுவனத்தின் மீது கானத்தூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.

முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், கானாத்தூர் போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன ?

கானத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கானத்தூர் காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் விவரம் பின்வருமாறு :  கடந்த ஜனவரி மாதம் 2023ஆம்  காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 27/7/2023 ஆம் தேதி  ஏ சி டி சி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் ஏமநாத் என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் 12/8/2023 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நடைபெற உள்ள பனையூர் சென்னையில் உள்ள ஆதித்யா ராம் மைதானத்தில் மறக்குமா நெஞ்சம் என்ற ஏ ஆர் ரகுமானின் நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும்,  அதில் சுமார் 20,000 பொதுமக்கள்  ஏழு பிரிவுகளில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும்,  மேற்படி இடத்தில் பொதுமக்கள் வருகைக்கு போக்குவரத்து வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு சுமார் 400 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும்  தெரிவித்தனர். பிறகு 10/8/2023ஆம் தேதி கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய நான்  ஆய்வு செய்தேன்.


 ஏ.சி.டி.சி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்ததை போல் 20 ஆயிரம் மக்கள் அமர இடம் உள்ளதாக மேலும் போக்குவரத்து வாகனம் நிறுத்துவதற்கு உரிய வசதி உள்ளது என்று தெரிந்து கொண்டேன். 12/ 8/ 2023 இல் நடக்க இருந்த நேரடி இன்னிசை நிகழ்ச்சி பலத்த மழையின் காரணமாக  அன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு பதிலாக மாற்றுத் தேதி 10/9/ 2023 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. 10/9/2023 ஆம் தேதி நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை சார்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார் 669 மற்றும் போக்குவரத்து காவல் போலீசார் 204 பேர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர்  ஏ.சி.டி.சி நிர்வாகிகள் கூறியது போல் இல்லாமல் அளவிற்க்கு அதிகமான பார்வையாளர்கள் குவிந்தனர்.

இதனால் வாகன நிறத்தை இடம் இல்லாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மற்றும் பார்வையாளர்கள் அமர இடமில்லாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படும் நிலை உருவானது காவல்துறையில் பெரும் முயற்சியால் எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மேலும் பின்பு விசாரணை செய்ததில் ஏசிடிசி நிர்வாகிகள் உறுதி அளித்த 20000     பார்வையாளர்களுக்கு அதிகமானோர்  பார்வையிடுவதற்கு அனுமதி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. பொதுமக்கள் என்னிடம் நேரடியாக தெரிவித்ததில் இருந்து சமூக வலைதளங்கள் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் சுமார் 45 ஆயிரம் அனுமதி சீட்டுகளை ஏசிடிசி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

எனவே பொதுமக்களிடம் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக பணத்தை வசூல் செய்து அதற்கு உண்டான வசதியை செய்து கொடுக்காமல் பொதுமக்களுக்கு மோசடி செய்ததாகவும் மற்றும் தன்னுடைய சுயலாபத்திற்காக எடுத்துக் கொண்டதாக தெரிய வருகிறது. எனவே காவல்துறை வழங்கி அனுமதி மற்றும் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தையும்  பெரும் போக்குவரத்து இடஞ்சலையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஏ சி டி சி நிர்வாகம் மற்றும் பொதும க்களுக்கு மோசடி செய்ததால் அவர்கள் மீது சட்டை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஆய்வாளர் தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து  138 மற்றும் 188 ஆகிய  இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget