மேலும் அறிய

திருமணத்தை மீறி நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு !! கணவனை தீர்த்து கட்டிய மனைவி

கணவனின் நண்பருடன் கள்ள உறவு வைத்து , மது அருந்த வைத்து கொலை செய்ய மனைவிழ

தனியார் நிறுவன பாதுகாவலர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரைச் சேர்ந்த அல்லாட நாகராஜி ( வயது 39 ) மற்றும் ரம்யா ( வயது 36) ஆகியோர் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வந்து மதுரவாடாவின் பகுதியில் வசிக்கின்றனர்.

நாகராஜி ஒரு தனியார் பாதுகாவலராக பணிபுரிகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்கலி பகுதியைச் சேர்ந்த வசந்த ராவ் (வயது 31) உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வசந்த ராவ் விசாகப்பட்டினம் காஞ்சரபாலம் தர்ம நகரில் வசிக்கிறார்.

திருமணம் மீறிய உறவு

வசந்த ராவ் நாகராஜிவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் போது ரம்யாவுடன் திருமணத்திற்குப் அப்பால் உறவு ஏற்பட்டது. சில மாதங்கள் கழித்து நாகராஜி இதை கவனித்து மனைவியைக் கண்டித்தார். ஆனால் ரம்யா நடத்தை மாறவில்லை, மேலும் தன் காதலன் வசந்தராவுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்து வசந்த ராவிடம் தெரிவித்துள்ளார்.

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய வசந்த ராவ், ஐயப்பனுக்கு மாலை அணிந்த போது ராம்பாபு மற்றும் பாண்டு என்ற இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாகராஜிவை கொலை செய்யும் திட்டத்தை கூறினர். இதனையடுத்து ஐயப்ப மாலை கழற்றிய பிறகு நாகராஜிவை கொலை செய்ய மூவரும் முடிவு செய்தனர்.

திட்டமிட்டு மது அருந்த அழைத்த நண்பர்

கொலை செய்ய ரம்யாவும் , வசந்த ராவும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். திட்டமிட்டப்படி ஐயப்ப மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்ததும், மது அருந்துவதற்கு அடிமையான நாகராஜிவை வசந்த ராவ் திட்டமிட்டபடி மது அருந்த அழைத்தார். அதற்கு முன், வசந்த ராவ் ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு அழைத்து சென்று அனைவரும் மது அருந்தினர்.

அதிகமாக மது அருந்திய குடிபோதையில் இருந்த நாகராஜிவை அனைவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை மூடி அவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். பின்னர் வாடகை பைக்கை பெற்று வந்து நாகராஜி உடலை ஹோட்டல் அறையில் இருந்து பைக்கில் கொண்டு செல்லப்பட்டு, திம்மாபுரம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய ரம்யா உட்பட நான்கு குற்றவாளிகளும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் சமீப காலமாக செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கொலை நடந்த நாளில், ரம்யாவும், வசந்த ராவும் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தவில்லை. சந்தேகத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். நாகராஜி கொலைக்குப் பிறகு, ரம்யா பி.எம்.பாலம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது கணவர் காணவில்லை என்றும், அவர் ஒரு மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

தனி அறை எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த ரம்யா

ரம்யா - வசந்த ராவ் இடையேயான தகாத உறவு தான் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில் நாகராஜி இறந்த பிறகு ​​ரம்யாவும் வசந்தராவும் வேறு அறை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து ரம்யா, வசந்த ராவ், ராம்பாபு மற்றும் பாண்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாகராஜிவின் உடல் ஒரு வெறிச்சோடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
Gateway of Chennai: ஹைதராபாத், பெங்களூருவை மிஞ்சப்போகும் சென்னை! சென்னையின் 'கேட்வே' மாஸ்டர் பிளான்! என்ன சிறப்பு?
Gateway of Chennai: ஹைதராபாத், பெங்களூருவை மிஞ்சப்போகும் சென்னை! சென்னையின் 'கேட்வே' மாஸ்டர் பிளான்! என்ன சிறப்பு?
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget