மேலும் அறிய

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மூத்த முன்னோடிகளுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்திப்பு கூட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட கட்சி முன்னோடிகளுடன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? -  அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ”சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது. நாளொன்றுக்கு 35 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே சென்ற சாலையில், இப்பொழுது 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கிறது. செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரை இருக்கும் சாலையை 8 வழி சாலையாக விரிவு படுத்த வேண்டும். இந்த சாலையில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சாலை விபத்துகளில் இந்த பகுதியில் மட்டும் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் இது போன்ற நிலைமை இருப்பது கிடையாது, குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் சட்டம் அந்த நாட்டில் இருக்கிறது.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? -  அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
உள்ளூர் மக்களுக்கு வேலை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், தமிழ்நாடு மக்களுக்கே வேலை வழங்குவது கிடையாது. இதுகுறித்து பாமக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளது. அதேபோல் அதிகளவு தொழில் நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இங்க இருக்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% பேர் பணியாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக 50 சதவீதம் பேர் உள்ளூர் மக்களாக இருக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். உள்ளூர் மக்களுக்கே வேலை என்ற சட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது என்பதை மேற்கோள் காட்டினார்.
 
 
தடுப்பூசி மாஃபியா
 
செங்கல்பட்டில், தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது, கட்டிய உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமலே இருக்கிறது. போதிய வசதிகள், போதிய விஞ்ஞானிகள் இருந்தும் அங்கு தடுப்பூசி தயாரிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன, என கேள்வி எழுப்பினார். மேலும், கொரோனா தடுப்பூசி மட்டுமில்லாமல் அனைத்து வகையான தடுப்பூசிகளின் இங்கு தயாரிக்க முடியும். இந்த நிறுவனத்தில் தடுப்பூசி உருவாக்கும் பட்சத்தில், உலக அளவிலேயே தடுப்பூசியின் விலை குறையும். இந்த நிறுவனம் செயல்படாமல் இருப்பதற்கு பின்னணியில் தடுப்பூசி மாஃபியா உள்ளது. உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? -  அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
 
மாவட்டம் முழுவதும் போதை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பொருள் மாணவர்களிடம் எளிதில் கிடைக்கிறது. கஞ்சா, ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதையிலேயே செல்கின்றனர். முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு  10 நாட்கள் வேலை செய்தார்கள். ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்ற தான் வருகிறது. முதலமைச்சர் இதுகுறித்து மாதம் கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகளிடம்  உத்தரவிட வேண்டும்  என தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget