மேலும் அறிய

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மூத்த முன்னோடிகளுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்திப்பு கூட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட கட்சி முன்னோடிகளுடன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ”சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது. நாளொன்றுக்கு 35 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே சென்ற சாலையில், இப்பொழுது 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கிறது. செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரை இருக்கும் சாலையை 8 வழி சாலையாக விரிவு படுத்த வேண்டும். இந்த சாலையில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சாலை விபத்துகளில் இந்த பகுதியில் மட்டும் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் இது போன்ற நிலைமை இருப்பது கிடையாது, குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் சட்டம் அந்த நாட்டில் இருக்கிறது.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
உள்ளூர் மக்களுக்கு வேலை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், தமிழ்நாடு மக்களுக்கே வேலை வழங்குவது கிடையாது. இதுகுறித்து பாமக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளது. அதேபோல் அதிகளவு தொழில் நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இங்க இருக்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% பேர் பணியாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக 50 சதவீதம் பேர் உள்ளூர் மக்களாக இருக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். உள்ளூர் மக்களுக்கே வேலை என்ற சட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது என்பதை மேற்கோள் காட்டினார்.
 
 
தடுப்பூசி மாஃபியா
 
செங்கல்பட்டில், தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது, கட்டிய உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமலே இருக்கிறது. போதிய வசதிகள், போதிய விஞ்ஞானிகள் இருந்தும் அங்கு தடுப்பூசி தயாரிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன, என கேள்வி எழுப்பினார். மேலும், கொரோனா தடுப்பூசி மட்டுமில்லாமல் அனைத்து வகையான தடுப்பூசிகளின் இங்கு தயாரிக்க முடியும். இந்த நிறுவனத்தில் தடுப்பூசி உருவாக்கும் பட்சத்தில், உலக அளவிலேயே தடுப்பூசியின் விலை குறையும். இந்த நிறுவனம் செயல்படாமல் இருப்பதற்கு பின்னணியில் தடுப்பூசி மாஃபியா உள்ளது. உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்படாததற்கு காரணம் என்ன..? - அன்புமணி அதிர்ச்சி தகவல்
 
 
மாவட்டம் முழுவதும் போதை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பொருள் மாணவர்களிடம் எளிதில் கிடைக்கிறது. கஞ்சா, ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதையிலேயே செல்கின்றனர். முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு  10 நாட்கள் வேலை செய்தார்கள். ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்ற தான் வருகிறது. முதலமைச்சர் இதுகுறித்து மாதம் கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகளிடம்  உத்தரவிட வேண்டும்  என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Embed widget