மேலும் அறிய

எமர்ஜென்சி கதவைத் திறந்த பயணி.. அதிர்ச்சியில் சென்னை விமான நிலையம்.. நடந்தது என்ன?

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற மும்பையை சேர்ந்த பயணியை, விமானத்திலிருந்து கீழே இறக்கி, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு. 

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, பயணி ஒருவர், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால் விமானம், 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவில், சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது.

திறக்கப்பட்ட அவசரகால கதவு

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். ‌அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமானத்துக்குள் ஒலித்தது. இதை அடுத்து விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார். 

தெரியாமல் செய்து விட்டேன்

உடனடியாக விமான பணிப்பெண்கள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி யார்? என்று விசாரித்தனர். அப்போது அவசரகால கதவு அருகே இருக்கையில் அமர்ந்திருந்த, மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் (45) என்ற பயணி தான், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றார் என்று தெரியவந்தது. இதை அடுத்து விமானி, அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்தப் பயணி, தெரியாமல் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி விட்டேன் என்று கூறினார். ஆனால் விமானி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

போலீசில் ஒப்படைப்பு 

இதை அடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் பின்பு அந்த பயணியின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டு, பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதோடு அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். 

விமான பயணி மீது வழக்கு பதிவு

சென்னை விமான நிலைய போலீசார் மும்பை பயணி வருண் பாரத் மீது, விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியது, விமானத்துக்குள் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மும்பை செல்ல வேண்டிய இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 151 பயணிகளுடன், 2 மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள், தேவை இல்லாமல் அவசரகால கதவுகள் உள்ளிட்டவற்றை திறக்க கூடாது என்பது விதி உள்ளது. இந்தநிலையில் அதை மீறிய பயணி, தெரியாமல் செய்து விடடதாக கூறியது மட்டுமில்லாமல் விமானத்தில் இருந்த பணி பெண்கள் மற்றும் விமானியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இவர் மீது புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
கார்த்திகை தீபம்: வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம், எண்ணெய் & திரி! செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள்!
கார்த்திகை தீபம்: வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம், எண்ணெய் & திரி! செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள்!
Embed widget