மேலும் அறிய

Aircraft Engine trouble :சென்னையில் இருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு... பயணிகளின் நிலை என்ன?

சென்னையில் இருந்து புறப்பட இருந்த கத்தார் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், 336 பேர் உயிர் தப்பினர். 

சென்னையில் இருந்து கத்தார் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், நல்வாய்ப்பாக 336 பேர் உயிர் தப்பினர். 

விமானத்தில் கோளாறு

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 324 பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 336 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல தொடங்கிய போது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார்.ன்விமானி அவசரமாக ஓடுபாதை அருகே விமானத்தை நிறுத்தினார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்தார். 

பயணிகள் தவிப்பு

இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் பயணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.விமானத்தை பழுது பார்க்கும் பணி மாலை வரை முடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 324 பயணிகளும் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். 

இந்த விமானம் பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் தான் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் செல்ல வேண்டிய பயணிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் எந்திரக்கோளாறு தொடர்பாக  விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக  கடந்த ஜனவரி மாதம்  2-ஆம் தேதிசென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். கோலாலம்பூர் செல்வதற்காக 109 பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். 
 
மலேசியன் ஏர்லைன்ஸ்  விமானி, விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை  சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்து என்று கருதிய விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை. 
 
விமானம் தாமதமாக, புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதை அடுத்து பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்  சோர்வடைந்தனர். விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளுக்கு அவசர, அவசரமாக உணவு வழங்கப்பட்டது. விமானம் விரைவில் புறப்படு என்று உறுதி அளிக்கப்பட்டது. 
 
பயணிகள் கடும் வாக்குவாதம் 
 
காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தும்  விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளர்களால், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து 7  மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகள்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விமான நிறுவன அதிகாரிகள், விமானம் அன்று ரத்து என்று அறிவித்தனர். அதோடு பயணிகள் 159 பேரையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்தனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு அடுத்தநாள் காலையில் மீண்டும் சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், விமானம் வானில் பறப்பது நிறுத்தப்பட்டது. அதோடு பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 167 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget