மேலும் அறிய

திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!

திமுகவுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் எதிர்பாராத விதமாக அதிமுகவைச் சேர்ந்த கீதா கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
 
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தொடங்கியவுடன் உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என்றும், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
 
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் ஒன்றியத்தில் இன்று காலை தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து வித ஆயத்தப் பணிகளும் நடைபெற்று கொண்டிருந்தது. மதுராந்தகத்தில் ஒன்றியத்தில் 22 வார்டுகள் உள்ளன. அவற்றில திமுக கூட்டணி 11 இடங்களில் வென்றிருந்தது.  அதேபோல் அதிமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் இந்த ஒன்றியத்தை திமுக கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தது.  
 

திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
 
ஆனால் இன்று நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த பத்மபிரியா நந்தகோபால் மற்றும் ஒப்பிலால் சத்திய சாய் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இரண்டு தரப்பும் வார்த்தைகளால் மாறி மாறி திட்டிக் கொண்டுதால், சலசலப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  இதனை தொடர்ந்து மதுராந்தகம் ஒன்றிய தலைவர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கீதா கார்த்திகேயன் மற்றும் திமுக சார்பில் ஒப்பிலால் மற்றும் பத்மாவதி ஆகியோர் போட்டியிட்டனர்.

திமுகவில் முற்றிய கோஷ்டி பூசல்...!-மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான அதிமுக வேட்பாளர்...!
 
நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் 10 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ஒப்பிலால்  திமுக 5 வாக்குகளும், பத்மபிரியா  7 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்கு வேண்டும் என்ற விதி உள்ளதால் மறு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின்  கீதா கார்த்தியேன்  15 வாக்குகளும், திமுகவின் பத்மபிரியா 7 வாக்குகளும் ஒப்பிலால் வாக்குகளும் 5  பெற்றனர். அதிமுகவுக்கு போடப்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் கீதா கார்த்திகையேன் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் மதுராந்தகம் ஒன்றியத்தை திமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக கோஷ்டி பூசலால், அதிமுக கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget