மேலும் அறிய

GST Road Traffic Change: தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் - ரூல்ஸ் என்ன?

GST Road Traffic Change Diwali 2025: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான பயணத்தை எளிதாக்கும் விதமாக, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

GST Road Traffic Change Diwali 2025: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஜிஎஸ்டி சாலையில், இரண்டு நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்:

நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான மக்கள் பயணிக்க உள்ளனர். இதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்த சாலையில் இரண்டு நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என, தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி சாலை - கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை:

தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17,18, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

  • சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்படும்
  • பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்
  • மதுரவாயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருக்கோயிலூர் வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்
  • காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஒரகடம்சந்திப்பில் திருப்பி விடப்படும்
  • ஒரகடம் சந்திப்பில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்
  • அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதிகளில் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை செல்ல வேண்டும்
  • சிங்க பெருமாள் கோயில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை செல்ல வேண்டும்
  • இரும்புலியூர் பாலத்தில் நெரிசல் ஏற்பட்டால் கனரக வாகனங்கள் வண்டலூர் வெளிவட்ட சாலையில் திருப்பி விடப்படும்

பொதுமக்களுக்கான பிற வசதிகள்:

புதுச்சேரி, கடலூர். சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக OMR மற்றும் ECR வழித்தடங்களைப் புறப்பாடு மற்றும் திரும்பி வருவதற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சாலை மார்க்க மான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க. சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து (2,092) சிறப்புப் பேருந்துகள், 16.102025 முதல் 19.10.2025 வரை இயக்கப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு கோரிக்கை:

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி இரயில் நிலையங்களிலிருந்து, கூடுதல் புறநகர் இரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget