மேலும் அறிய

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

ஆள் கடத்தலுக்கு உதவியதாக  ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் ஆஜரான நிலையில் ஆள் கடத்தலுக்கு உதவியதாக  ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்:

திருவள்ளூர் மாவட்டம் நான் காடு பகுதியில் வசித்து வருபவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய உள்ளது. இதனை அறிந்த விஜயா ஸ்ரீயின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறுவன் கடத்தல் 

இதனைத் தொடர்ந்து விஜயா ஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து விஜயா ஸ்ரீயின் பெற்றோர் உறவினர்களிடம் விசாரித்த பொழுது தனுஷ் உடன் விஜயா ஸ்ரீ கடந்த மே மாதம் 15ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகிய உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து திருவாலங்காட்டில் உள்ள களப்பாக்கத்தில் தனுஷின் வீட்டிற்கு சென்ற விஜயஸ்ரீயின் உறவினர்கள் தனுஷின் தம்பி இந்திரஜுத் என்பவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனுஷின் தாய் காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்துள்ளார்..

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயாஸ்ரீ என் தாய் வனராஜா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சியை தலைவரும், எம்எல்ஏவமான பூவை ஜெகன்மூர்த்தி ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் பூவை ஜெகன்மோர்த்தியிடம் விசாரிக்க அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர்.

பூவை ஜெகன்மூர்த்திகு தொடர்பு

மேலும் இந்த காதல் விவகாரத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தனுஷ் தம்பி கடத்தப்பட்ட நிலையில் இந்திரஜித் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பூவை ஜெகன்மூர்த்திக்கும், இந்த கடத்தில் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.

ADGP ஆஜர்:

இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைககு வந்தது. .இந்த சூழலில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக வேண்டும் என செயல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதி சரமாரி கேள்வி: 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூவை ஜெகன்மூர்த்தியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்,மக்கள் எதற்காக ஓட்டு போட்டார்கள் என்பதை மறந்து கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா?விசாரிக்க வந்த போலீசாரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்?ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டப் பஞ்சாயத்து செய்தீர்கள்? . விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும் என்று நீதிபதி அடுக்கான கேள்விகளை வைத்தார்.

ADGP ஜெயராமன் கைது: 

கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக போலீஸ் கூறியதை அடுத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட கோர்ட், ADGP மீது வழக்குப் பதிவு செய்யாததை நீதிபதி வேல்முருகன் கடுமையாக சாடினார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் ADGP கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Embed widget