![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
காஞ்சிபுரம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு..
Migjam Cyclone: 25 பேர் கொண்ட குழுவினர் மாங்காடு பகுதியிலும் 25 பேர் கொண்ட குழுவினர் காஞ்சிபுரம் பகுதியிலும் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
![காஞ்சிபுரம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு.. 50-member National Disaster Response Team has arrived in Kanchipuram district as a precautionary measure to face Migjam Cyclone காஞ்சிபுரம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/9c9b1484a1528d4e669549e00739ad781701521346728113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![காஞ்சிபுரம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/98f6baa951d98336e86ec4380e9174f31701521069302113_original.jpg)
![காஞ்சிபுரம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/166a7f9d00159921f52c645c44a466821701521138817113_original.jpg)
4,5ம் தேதிகளில் மக்கள் வெளியில் வரக்கூடாதா? உண்மை என்ன?
வரும் 3,4 ஆம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புயல் காரணமாக சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம் என பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றுக்கு தாழ்வு மண்டலமாக இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 670 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும்.
அடுத்த 3 தினங்கள்:
வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)